Friday, July 2, 2010

அம்"மனம்" - கவிதை - குட்டி

அரைகுறையென்பது ஆபத்தென்றறியாத
அரை வேக்காட்டு முட்டாளாய்!
ஆட்சியெனும் ஆர்வத்தில்
அலங்கோலமாய் படைக்கப்பட்டாய்!
அமைதியென்னும் அதிர்வை
அறியாத சினமாய்!
அன்பென்ற ஆத்திச்சுவடியை
அழித்துக்கொண்ட நெஞ்சமாய்!
அழகான மனமொன்றை
அழித்துவிட்ட மூர்க்கனாய்!
அனுபவங்கள் அலையாட
அந்தரங்கள் ஆசையாய்!
ஆர்ப்பரிக்கிறேன் ஆசையாய்
அமைதியான மனத்திற்காய்!
அன்பு, அழகு, அறிவு,அனுபவம்,அமைதி எனுமிந்த ஐந்து
ஆக்கங்களை அளிப்பாயா? இந்த அற்பனுக்கு ஆதரவாக!
- குட்டி

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.