Sunday, September 6, 2009

ஏர் இந்தியாவுல ஏன் யாரும் ஏறவில்லை

நேத்து தான் நியூஸ்ல பார்த்தேன் ..ஏர் இந்தியா விமானம் தீ பிடிச்சு  நின்னு போச்சாம்.அதுவும் நான் ரியாத்க்கு போன அதே விமானம். அப்பறம் எவன் ,எமனை தேட ஏர் இந்தியாவுல போவான்?

ரியாத்க்கு நானும் ஏர் இந்தியாவுல தான் போனேன்.பணம் என்னவோ  கம்மி தான் .ஆனா ?.
எல்லாருக்கும் ஒரு டிவி தனி தனியா இருந்துச்சு ,ஆனா முக்கால்வாசி டிவி ஓடவே இல்ல.
சர்வர் ப்ராபளம் என்ற மெசேஜ் மட்டும் தான் வந்துச்சு,படமும்  வரல பாட்டும் வரல. சரி விமான பணிப்பெண் கிட்ட சொல்லாம்னு பார்த்தா ,பணிப்பெண்க்கு பதிலா அவங்க அம்மா வருது .பாவம் இந்த வயசான காலத்தில அது என்ன பண்ணும் .அதான் ஒண்ணுமே பண்ணல.இறுதி வரை அந்த டிவி ஓடவா இல்ல.அந்த டிவி ல என்ன தான் ஓடுமோ என்ற கனவு ,நிராசை ஆகவே போச்சு .

நாலு பசங்க தான் எல்லா வேலையும் பாத்தாங்க.விமான பணிப்பெண் பற்றிய என் கற்பனைகள் எல்லாம் விபத்துல நொறுங்கி போன டாட்டா சுமோ போல் ஆச்சு.

ஆரம்பத்துல AC போடவே இல்ல.வேர்த்து கொட்டிடுச்சு..அப்பறம் டிவி ம் ஓடல ,பேப்பர் ம் ஹிந்தி,
பணிப்பெண் ம் ..வேணாம் ,அந்த துயர சம்பவத்தை நான் மறக்க முயற்சி செய்கிறேன்.
அதனால கொஞ்ச நேரம் கண்ணை மூடி கனவு கண்டிட்டு இருந்தேன்.
உடம்பு எல்லாம் கிடு,கிடு னு நடுங்குது.என்னடா இது ,இங்க வெயில் தானே பட்டய கிளப்பும் னு சொன்னாங்க னு பார்த்தா ?..வெளியுல மேகம் தான் தெரிஞ்சுது .உடனே HELP பட்டனை அழுத்தினேன் .ஆனா உடனே யாரும் வரவே இல்ல .உடனே மட்டும் இல்ல -கடைசி வரை ஒருத்தரும் வரல..
நடுங்கி கிட்டே போனேன்.

தொடரும்..




இது மட்டும் தானா ? இல்ல.

 இன்னும் இருக்கு..ஆனா இப்ப இல்ல ..!!
சென்னை'ல இருந்து ரியாத் போகவே நாலு மணி நேரம் தான் ஆகும் .ஆனா நம்ம  ஏர் இந்தியா குடுக்குது ஒரு அதி அற்புதுமான வழி(வலி ). ரியாத் --> டெல்லி --> மும்பை --> சென்னை ..வெளங்கிடும் ..
அந்த கடவுள் தான் என்னை  வரும் போது(நவம்பர் - 12) காப்பாத்தனும்.

12 ம் தேதி 10:45 க்கு கெளம்பி, அடுத்த நாள் காலை 3 மணிக்கு தான் சென்னை வரேன்.