Wednesday, December 23, 2009

மறப்பதும் மன்னிப்பதும்


மறப்பதும் மன்னிப்பதும்
மனிதநேயம் என்றோம்!
நாங்கள் கூறியது தவறை,
நீங்கள் மன்னித்து
மறந்துபோனது மனிதனை!!
-குட்டி


Thursday, November 12, 2009

அரசியல்வாதி


- குட்டி ( Published in யூத்ஃபுல் விகடன்)

நீ என் முதுகில் குத்தினாய்
நான் உன் நெஞ்சில் குத்தினேன்
நீ புரணி பேசினாய்
நான் மேடை போட்டு உன்னை உருக்குலைத்தேன்
நீ கூடவே இருந்து குழி பறித்தாய்
நான் உன்னை அதிலே போட்டு மூடிவிட்டேன்
நீ அரசியல் செய்தாய்
நான் அட்டூழியம் செய்தேன்
நீ என்னை பேடி என்றாய்
நான் இல்லை என நிரூபித்து காட்டினேன்
நீ குழைத்தாய்
நான் கடித்தேன்
நீ சொல்லால் அடித்தாய்
நான் கல்லால் அடித்தேன்
நீ என் உழைப்பை உரிந்தாய்
நான் உன் ரத்தத்தை உரிந்தேன்
நீ நியூட்டனின் இரண்டாம் விதியை மட்டும் உபயோகித்தாய்
நான் மூன்று விதிகளையும் சேர்த்து உபயோகித்தேன்

முள்செடி என்னை குத்தியது

வேரோடு அதை பிடுங்கி எறிந்தேன்
என்னாடா உலகம் இது
"எய்தவன் அங்கிருக்க அம்பை நொந்து கொள்கிறார்கள்"
ஆம், இந்த உலகுக்கு
நீ நல்லவனாம்
நான் கெட்டவனாம்
என்னை மன்னித்துவிடுங்கள் மக்களே!
இந்த சந்தர்ப்பவாத உலகில்
நானும் ஒரு சாமர்த்தியமான சந்தர்ப்பவாதிதான்
சத்தமில்லாமல் அரசியல்வாதியாக!
*

Sunday, November 8, 2009

இணைய தளத்தில் இலவசமாய் கிரிக்கெட் பார்க்க

இணைய தளத்தில் இலவசமாய் 'Cricket' பார்க்க இங்கே கிளிக்கவும்.
http://webcric.com/
http://www.crictime.com/server1.htm
http://www.crictime.com/server2.htm


சிறப்பம்சம்--

Linux லும் work ஆகும்.

தேவை;
Flash player


சில குறிப்புகள்:

1."Channel blocked by அட்மின்" என்ற செய்தி கிடைத்தால் ,வேறு server அல்லது வேறு streaming யை தேர்வு செய்யலாம்.
2.விளம்பரங்களை தவிர்க்க 'pop-up' களை blog பண்ணலாம்.
Firefox - https://addons.mozilla.org/en-US/firefox/addon/1788

3.விளம்பர flash களை தவிர்க்க firefox ல் இதை உபயோகப்படுத்தலாம்..
https://addons.mozilla.org/en-US/firefox/addon/433

குறிப்பு - "Flash blog "கிரிக்கெட் ஓடும் திரையையும் தடை செய்யும்.
அதை மட்டும் ஒரு முறை click செய்து ஓட விடலாம்.

Wednesday, November 4, 2009

ஹைக்கூ.. அரசியல்

பிறந்த குழந்தையின்
முதல் மழலை
அம்மாவாக இல்லை,
அப்பாவாக இல்லை,
அரசியலாக இருந்தது.

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !

என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும் மண்ணாகி போனதே !
நடை பிணமாய் வாழ்ந்தென்ன ! மனங்கேட்டவர்களே !
ஐம்பதுக்கும் ஐந்னுருக்கும் இனத்தை அடமானம் வைத்தீர்களே !
பிரபாகரன் என்ன அவனது குடும்பத்தை வளர்த்தானா?
உன் இனத்துக்கும் மனிதாபிமானத்துக்கும போராடி பொறுமை காத்தான்!
மண்ணுக்கும் பொன்னுக்கும் போராடவில்லை !
உன் இன பெண்களுக்காக போராடினான்!
உன்னிடம் உயிர் பிச்சை கேட்டனா ?
தமிழினத்தின் மறு பிழைப்புக்கு பிச்சை கேட்டான் !
மாற்ற நாடுகள் உதவிட முன்வந்ததே ! நீ எங்கே சென்றாய் !
ஓ ! உனக்கு தான் உன் குடும்பத்தை கவனிக்க வேண்டுமே !
ராஜீவ் என்ற ஒரு உயிருக்கு பல ஆயிரம் உயிர்களா?
மானமுள்ள தமிழனே உயிர் உனதல்ல முன்னவர்கள் இல்லையேல்!
நன்றி கெட்ட மனிதா! நாட்டை அயல்நாட்டவனுக்கு அடமானம் வைத்தாயே!
காட்டி கொடுக்கும் கயவனை கையமர்த்தினாயே!
உயிர் கொடுத்த தமிழ் தாயை தத்து கொடுத்து, கொன்றாயே!
உனக்கும் சாவு மணி அடிக்கிறது, அறிவிலியே !
அயர்ந்து தூங்குகிராயோ! அழிந்து போனது உன் சந்ததி!
அழிவு நடக்கட்டும்! மானமுள்ளவர்கள் மரிக்கட்டும் !
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !
நீ உன் வேலையை பார் ! உனக்கு எதற்கு அயல் நாட்டு பிரச்சனை எல்லாம் !!

Sunday, November 1, 2009

பிழை கொண்ட(கண்ட) பயணம்!

தமிழகத்தின் ஒரு முக்கிய மத்திய சிறைச்சாலை. வாரத்தில் ஒரு முறை எச். . வி நோயாளிகளை சிறையில் சென்று பார்ப்பது எனது பணி, நான் ஒரு எச். . வி க்கான மருத்துவன். என்னை யாரோ பின்னால் அழைத்த குரல் கேட்க என் எக்ஸ்பிரஸ் வேகத்தை குறைத்து நின்றேன், எங்கோ பார்த்த முகம் போலிருக்க அவரே அறிமுகமானார் இந்த சிறையின் ஆண் செவிலியர் என்று. என் மறதிக்கு மன்னிப்பு கேட்டு கொண்டிருக்க சிறை மருத்துவரும் வந்து சேர்ந்தார். என்னுடைய கிளினிக்கிற்கு எச்..வி பாதிக்கப்பட்ட காவலர் ஒருவரை அனுப்புவதாகவும் அவர் ஒரு உயர் போலீஸ் அதிகாரியின் மச்சினன் என்றும் யாருக்கும் இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்றும் கேட்டு கொண்டனர். சொன்னபடி வந்தார் அந்த காவலர் அவருக்கு தேவையான மருந்துகளை எழுதி கொடுத்தேன், கூடுதலாக அவரது மனைவியிடம் மட்டும் விசயத்தை சொல்லுவது அவருக்கு ஏதேனும் பக்க விளைவுகள் வந்தால் பக்க பலமாய் இருக்கும் என்றேன். சில நாட்களில் திரும்ப நல்ல முன்னேற்றத்துடன் வந்தார் ஆனால் மனைவியிடம் எதுவும் சொல்லவில்லை. திரும்பவும் ஆலோசனை வழங்க அவராகவே மனைவியிடம் விசயத்தை சொல்லி விட்டார் .
விஷயம் அவரது மச்சினனான உயர் போலீஸ் அதிகாரிக்கு தெரிய குடும்ப மானமே பெரிதென எங்கோ அடைத்து வைத்தனர். என்னிடம் செல் போனில் தொடர்பு கொண்ட அவரது மனைவி அவரை குண படுத்த வேண்டுமெனவும் அவரது ஓரின சேர்க்கை குணம் மாற வேண்டும் என்றும் கேட்டார். அவரது வாழ் நாள் பிரச்சனையே இல்லை மற்றவர்களை போலவே வாழ்வார் ஆனால் ஓரினச்சேர்க்கை குணத்தை முழுமையாய் மற்ற முடியாது என்றேன் , அவசரமாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது. சில நாட்களில் என்னை தேடி இரண்டு காவலர்கள் மபிட்டியில் வந்து அவருக்கான மருந்துகளை பெற்று சென்றனர்-உயர் அதிகாரியின் கைகூலிகள். நோயாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பதாகவும் மனமாற்றத்திர்க்காக வெளியூரில் வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். சில வாரங்களில் நோயாளி மோசமான நிலையில் இருப்பதாக சிறை செவிலியர் சொல்ல, காரணம் அவரது குடும்பத்தார் அவரை சிகிச்சை எடுக்க என்னிடம் அனுமதிக்காமல் அடைத்து வைத்தது அம்பலமானது. விஷயமறிந்து வீறு கொண்டு எழுந்து போராட, உதவிக்கு மற்றொரு எச்..வி பாதிக்கப்பட்ட காவலர் வர எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் போலீஸ் அதிகாரியை அணுகினோம். போலீஸ் அதிகாரியின் குடும்ப விசயமரிந்ததும் கை விரித்தார் நான் என்ன செய்யமுடியுமென்று. மனம் தளரவில்லை நாங்கள், செவிலியரின் உதவியுடன் அந்த நோயாளியின் வீட்டை அடைந்தோம். தனி வீடு- மனிதர் வாழும் அடையாளம் இல்லாது இருந்தது, ஒரே ஒரு கட்டில் அதன் கீழே தண்ணீர் சொம்பு மயான அமைதி,என்னை எமன் போல குடும்பத்தார் பாவித்தனர்.என் அழைப்பிற்கு திரும்பி பார்த்துவிட்டு பேச சக்தியின்று கண் சொருகினார் என்னை பிழை கொண்ட நோயாளி. குற்றுயிருடன் முனகி கிடக்கும் மனிதனை சிகிச்சைக்கு சேருங்கள் அவர் பிழைப்பது உறுதி என்றேன்,இல்லையேல் நாளை செய்தித்தாளில் இந்த விசயத்தை வெளியிடுவேன் என்றேன்.அவர்களோ குடும்பத்தில் கலந்து ஆலோசித்து முடிவு செய்கிறோம் என்றனர்.
திடீரென நியாபகம் வந்தது என் அண்ணனது கொளிந்தியால் திருமணம், இரண்டு நாள் விடுப்பில் என் ஊர் செல்ல மறந்து போனேன் நியாய அநியாயங்களை. வாரங்கள் கழிய எங்கோ இருந்து ஒரு மருத்துவர் என்னை அழைத்து அதே நோயாளியை பற்றி விசாரித்தார், மேலும் அவர் தங்களது மருத்துவமனையில் இருந்து discharge செய்த போது நோயாளி நலமுடன் இருந்தார் என்றார். சிறை செவிலியரை செல் பேசியில் அழைக்க, நான் எடுத்த திருமண விடுப்பில் நோயாளி அவரது கஷ்டங்களிலிருந்து விடுபட்டார் என்பதே கடைசி செய்தி.
இப்படிக்கு
மானங்கெட்ட மருத்துவன்

பயணி : சிறுகதை - குட்டி

        பயணி : சிறுகதை - குட்டி (Published in யூத்ஃபுல் விகடன்)
- குட்டி


ந்த மருத்துவனுக்கு பொழுதுபோக்கு ஊர் சுற்றுவது. சில நாட்களாய் பயணங்கள் இல்லாமல் சோம்பேறி ஆகியிருந்தான்.
நினைவலைகள் சுழல... தன்னுடைய கேரளத்து நண்பர்கள் நினைவில் வர, தொலைபேசி உரையாடலின் முடிவாய் கேரளத்து பயணம் ஆரம்பமானது.
ஓணம் பண்டிகையும் அந்த பயணத்திலேயே இணைந்தது.
மாலை வேளையில் மழை தூரலுடன் திரிச்சூரை அடைய, வரவேற்பு அமர்க்களப்பட்டது.
அன்று மது கடைகளுக்கு விடுமுறை என்பதால், இருமடங்கு விலையில் வாங்கப்பட்ட மதுவுடன் இரவு கேளிக்கை இரட்டிப்பு மகிழ்ச்சியில் நடந்தது.
வாடகை வீட்டில் பட்ட படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு படிக்கும் அவர்களுக்கு வழக்கமான மெஸ், ஒணத்தால் விடுமுறையில் இருந்தது. ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு மீதமிருந்த மதுவுடன் கடற்கரைக்கு சென்றனர். கடற்கரை கள்ளுகடையில் இரண்டு பாட்டில் கள் குடித்தனர்.
ஊர் சுற்றிவிட்டு நல்ல உறக்கம் கண்ட பயணிக்கு காலை விடிந்ததும் உறைத்தது வந்ததிலிருந்தே நண்பர்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தது.
ஓணத்துகாக விடுமுறை என்பதால் ஊர் சென்று விட்டனரோ என வினவ, மற்றவர்கள் எல்லோரும் இன்னொரு வீட்டில் படித்துகொண்டிருப்பது தெரிந்தது.
மாநிலம் தாண்டி வந்து படிக்கும் நண்பர்களை, மாநிலம் தாண்டி வந்து கெடுப்பது உறைத்தது.
நண்பர்களை நன்கு படிக்குமாறு கூறிவிட்டு ஊர் திரும்பினார்.
சில நாட்கள் கழிய டெல்லி நண்பன் நினைவு வர, தொலைபேசி உரையாடலுடன் டெல்லி பயணம் ஆரம்பமானது..!

Friday, October 30, 2009

பச்சை நிற பக்கெட் - ஒரு உண்மையின் தழுவல்

2002 ம் அண்டு ஜூன் மாதம்..பதினொன்றாம் வகுப்பு ஆரம்பம்.
அப்பா என்னை விடுதியில்(Hostel) தான் சேர்த்து விட்டார்.இந்த விடுதி வாழ்க்கை ,புதிய நண்பர்கள் என மகிழ்ச்சியாக இருந்தது.காலை எழுந்தவுடன் study hours ,அது முடிந்ததும்  குளிச்சிட்டு ஸ்கூல் கு கிளம்ப வேண்டியது தான் .அன்றும் வேகமாய் குளிக்க ஓடினேன்.பொது குளிலறைகள் என்பதால் சற்று நேரம் காக்க வேண்டி வரும் .மொத்தம் ஆறு குளியல் அறைகள்.எல்லாத்திலையும் தண்ணி சத்தம் கேட்க, ஓன்னு மட்டும் சும்மா சாத்தி  இருந்தது.திறந்து பார்த்தால்  ,எவனோ  பச்சை நிற பக்கெட் ஒன்றை முறைக்கு போட்டு விட்டு போய் இருந்தான் .அந்த பக்கெட்டை எடுத்து  வெளியில் போட்டு விட்டு ஆனந்தமாய் குளித்தேன்.வெளியில் வந்து பார்த்தால்.. தமிழ் ஐயா நின்னு கிட்டு இருந்தார் ,கையில்  பச்சை பக்கெட் உடன் .

இவரு பெரிய ராஜா  ,அவ்ளோ  அவசரமா? அப்படி அவசரமா  போய் என்னத்த கிழிக்க போற? போடா போ ..என்றார் தமிழ் ஐயா..தப்பு என் பேரில் இல்லை. எனக்கு கோவமாய் வந்தது.
டேய்,என்னடா இப்படி பண்ணிட்ட? என்றான்  ரமேஷ்.இருந்த கடுப்பில்,போடா.. அந்த ஆளு என்னத்த பண்ண போறான்..அந்த ஆள் தான் நம்ம class கே  வரது இல்ல .போடா என்றேன்.அந்த பாசக்கார பயபுள்ள,  அதை அப்படியே போய் அவரிடம் சொல்லி விட்டான் போல..
சாயங்காலம்.
என்ன ,நான் உங்க கிளாஸ் கு வரலை னா,எதுவும் பண்ண  முடியாதோ?practical marka போட போறான் ..சொன்னையா என்றார் தமிழ் அய்யா?..தலை குனிந்து நின்றேன்.நேரம் வரும், பார்த்துக்கிறேன் என்றார் அவர்.
மனதுக்குள்..அட துரோகி  ரமேஷ், practical மார்க் னு ஒரு எக்ஸ்ட்ரா பிட்டையும் சேர்த்து போட்டு தள்ளி விட்டாயே பாவி .பிறகு அந்த சம்பவத்தை மறந்தே போய் விட்டேன்.

ஆகஸ்ட் - 14 .ஸ்கூல் மீட்டிங் .
HM பேசுகிறார்,மாணவர்களே - நாளைய சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு "என்று தணியும் அடிமை தாகம் " என்ற தலைப்பில் 15 மாணவர்கள் பேச உள்ளார்கள் .அவர்களில் சிறப்பாய் பேசுபவர் நாளை சுதந்திர தின மேடையில்  பேசலாம் என்றார்.எல்லோரும் கை தட்டினார்கள்.
15 பேர் கொண்ட பட்டியலை வாசித்தார் தமிழ் அய்யா.ஒன்றன் பின் ஒன்றாய் எழுந்து முன்னாடி போய் மேடை பக்கத்தில் உட்கார்ந்தார்கள்.பெரும் அதிர்ச்சியாய் ,15 ஆக என் பெயர்.தெளிவாய் தெரிந்தது.தமிழ் அய்யா பலி வாங்கி விட்டார் .என்ன செய்வது என்றே தெரியலை..முன்னாடி போய் அமர்ந்தேன்.
மீண்டும் கை தட்டல்.

முதலாவதாய் ஒருத்தன் வந்தான் ,அவன் சொல்லி தான் தலைப்பே ஒழுங்காய்  தெரிந்தது.
"என்று தணியும் அடிமை தாகம். " எவன் தான் இப்படி எல்லாம் தலைப்பை எழுதி தரானோ தெரியல..இதுல போய் என்னத்த பேசுறது?முடிஞ்சது கதின்னு உக்காந்து இருந்தேன்.சங்க இலக்கியம்,பெண் அடிமை னு எதையோ பேசி கிட்டு இருந்தாங்க.நன்கு பேர் பேசி முடித்ததும் ஒரு முடிவுக்கு வந்தேன்.ஒழுங்கா பேசி ,நம்மை மாட்டிவிட்ட தமிழ் அய்யா மூஞ்சில கரி பூசனும்.
யோசித்தேன் ,எதுவும் தோன்ற வில்லை.எழுத பேனா எடுத்தேன்(Made in China ),கிடைத்தது ஒரு பாயிண்ட்.அந்த பாயிண்ட் இது தான் 'எல்லாரும் Made in china ,Made in USA  னு பெருமையா சொல்றோமே ,ஏன் யாரும் Made in India னு சொல்லறது இல்ல '.

அதுக்குள்ள 14 பேறும் பேசிட்டாங்க போல.நான் போனேன்.வணக்கம் சொல்லி ,எதையோ பேசினேன்.வழக்கம் போல ,மாணவர்கள் எல்லோரும் கொடுமையே னு கேட்டு கிட்டு இருந்தாங்க.சட்டென  யோசனை வந்துச்சு..அது என் வந்துச்சு னு தெரியலை..ஜவுளி கடை முன்னாடி விளம்பரம் 'Titanic saree'..பாயிண்ட் கிடைச்சுது (மிக பெரிய turning பாயிண்ட் னே சொல்லலாம்).
பேசினேன் .
"நம்ம ஊர்ல பொண்ணுங்க எல்லோரும் Titanic saree னு வெளி நாட்டு அடிமை மோகத்துல  saree வாங்கி கட்றாங்க ,ஆனா உண்மை என்னன்னா titanic  படத்துல கதாநாயகி saree கட்டுவதும் இல்ல,ஒன்னும் இல்லை னு "
மாணவர்கள் அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள்.நான் மகிழ்ந்து போனேன்.ஆகா!!,நமக்குள்ள இவ்ளோ திறமை இருக்குது ..தெரியாம போச்சான்னு நினைச்சேன்.பெரும் கைதட்டலோடு இறங்கி வந்தேன்.

15 நிமிட இடைவேளைக்கு அப்புறம் வெற்றியாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றார் தமிழ் அய்யா.
இரண்டு அடி வைப்பதிற்குள் ,HM கூப்பிடறார் என்றார் ,PT சார்.
பந்தாவாய் HM ஆபீஸ் போனேன் .கண்ணாடிய கழட்டுனார்.பளார்னு அறை விழுந்தது .எதிர்பார்க்காத அறை.ஆடி போய் நின்றேன்.
ஏன்டா,Titanic படத்துல Herione dress போட்டா உனக்கு என்ன ,போடலைனா உனக்கு என்ன ?அத மேடை ல வேற சொல்லுவியா? அறிவு இல்ல?என்றார்.
இல்ல சார் ,நான் சொல்ல வந்ததே வேற ,,saree  பத்தி தான் .
வாய மூடுடா ,என்றார்.யார் உன் பேர சேத்துனது, என்றார்?
தமிழ் அய்யா தான் வேணும்னே பேர போட்டுட்டார் என்றேன்.
அவரு போட்டா ?,எத்தன பேரு பாதியில் பேச முடியாம போன்னாங்க?நீயும் அப்படி போக வேண்டியது தானே?
போய் பேசாம உட்கார் என்றார் ,HM .உட்கார்ந்தேன்.

என் பேச்சின் அர்த்தம் மாறி போனதை உணர்ந்தேன்.அதுக்கு தான் கை தட்டுனாங்களா பசங்க?ஐயயோ....

தமிழ் அய்யா வாசிக்கிறார்,வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் ,
பத்மநாபன் (பெண் அடிமை பேசியவன்),அன்ன பூரணி (என்ன பேசுச்சுனே எனக்கு தெரியாது).

பின் பக்கத்தில் ஒரே சலசலப்பு,நிறைய மாணவர்கள் எழுந்து சத்தம் போட்டார்கள்.தமிழ் மீடியம் மாணவர்களை வேண்டும் என்றே ஒதுக்கி விட்டதாய் சொன்னார்கள்.ஒருவன் சத்தமாய் என் பெயரை சொல்லி ,பரிசு தர வேண்டும் என்றான்.ஆசிரியரின் தடிக்கு பயந்து கும்பல் அமைதி ஆனது.
அட பாவிகளா!,நான் என்னடா பண்ணுனேன்.என் பெயரை சத்தமாய் சொன்ன அந்த துரோகி யார்?.ஒரு வேலை அந்த ரமேஷ் யாய் இருப்பானோ?போச்சு ,என் கதை இன்னிக்கு முடிஞ்சது.

 மீண்டும் HM ரூமுக்கு அழைப்பு வந்தது,இந்த முறை பயந்துகிட்டு  தான் போனேன்.
முடியை பிடித்தார் .என்னடா,நீ என்ன பெரிய ரவுடி யா ? உனக்கு கோஸ்டி வேற?
முதுகில் இரண்டு அடி விழுந்தது.இனிமேல் உன்ன பத்தி எதாவது எனக்கு தகவல் வந்தது அவ்வளவு தான்.போடா என்றார்.

உள்ள அடி வாங்கினதை யார் கிட்டயும் சொல்லல?HM நெறைய points பேசனும்னு சொன்னார்னு சமாளிச்சேன்.கம்முனு மேடை ஏறி வணக்கம் ,போட்டுட்டு வந்திருக்கலாம்.தேவை இல்லாம பேசி ,வம்ப விலைக்கு வாங்கினது தான் மிச்சம் .நைசா ஒருத்தண்ட Titanic படம் பத்தி விசாரிச்ச அப்புறம் தான் ,HM ஏன் அடிச்சாருன்னு நல்லா வெளுங்குச்சு..

அடுத்த நாள் காலை குளிக்க போனேன் ,கதவை திறந்தேன் .பச்சை நிற பக்கெட் இருந்தது.அன்று குளிக்கவே இல்லை.எனக்கு,ஒன்று மட்டும் புரியவே இல்லை.
 "என் பெயரை சத்தமாய் சொல்லி ,பரிசு தர வேண்டும் என்றானே? அவன் யார்?.அவன் எதிர்பார்த்த பரிசு தான் என்ன ?"
 




நல்லதோ ,கெட்டதோ நாலு வார்த்தையை comment ல போடுங்க. 
 

Thursday, October 29, 2009

யானைக்கு -> தும்பிக்கை,நமக்கு - நம்பிக்கை ,, யோசனை - 1

எல்லாரும் கேட்டுக்குங்க  ..இப்ப நானும் பதிவர் தான் ..என் பதிவுக்கும் நாலு பேர் வாக்கு அளித்து விட்டனர் (ஒரு ஒட்டு என்னோடது..ஹி..ஹி ).சத்தியமா சொல்றேன் ,அந்த மூணு வோட்டும் நல்ல வோட்டு ..அவங்களா பெரிய மனசு வச்சு போட்டுடாங்க.அந்த நம்பிக்கையில் அடுத்த பதிவு ..

யானைக்கு தேவை தும்பிக்கை,நமக்கு தேவை நம்பிக்கை.

பதிவு எழுதும் முன் பதிவர்களின் பட்டியலை பார்த்து பயந்து,நடுங்கி விட்டேன்.தொடர்கதையாக இந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது.ஒரு துறையையும் இவர்கள் விட்டு வைக்க வில்லை .
நகைச்சுவை ,காதல்,கவிதை ,சிறுகதை,அரசியல்  மற்றும் சினிமா(இடம் பத்தாது ). இதை எல்லாம் தாண்டி இதன் கிளை பிரிவுகளுக்கு கூட சென்று விட்டனர்.உதாரணம் -- ஹாலிவுட் பாலா(ஹாலிவுட் விமர்சனம் ), மென்பொருள் (pkp).
இது போதாது என்று பெரும் தலைகள் கூட பதிவு எழுத வந்து விட்டன. உதாரணம் --> http://jeyamohan.in/ , http://gnani.net/ , http://www.sramakrishnan.com/
 இத்தனைக்கும் நடுவுல நான் பதிவு எழுதி ,அதையும் நாலு பேரு படிச்சுட்டாங்க..


கடந்த காலம்- (அதாங்க Flash back )
நாலு மாசத்துக்கு முன்னாடி பதிவு எழுதலாம்னு நெனச்சப்ப ,கபால்னு வந்துச்சு ஒரு யோசனை.
 
யோசனைகளும் வேதனைகளும்  


யோசனை - 1

மெகா சீரியல் - தொடர் நாடகம் - விமர்சனம்

ஆகா ,அற்புதம்.எப்படியும் இந்த தொடர்கள் எல்லாம் முடியபோறதே இல்ல .பெண்களின் பெரும்பான்மையான ஆதரவும் கிடைக்கும் .அப்புறம் என்ன னு நினைச்சு என் நண்பன்ட்ட ஆலோசனை கேட்க போன் போட்டேன் .மணி அப்போ ,இரவு 9.
அவனே அப்பதான் அவங்க அம்மா கூட சண்ட போட்டு கிரிக்கெட் பாக்க முயற்சி பண்ணி ,எதிர் கட்சியுல இவன் தங்கச்சியும் சேர்ந்துட ..நொந்து போய் விதி எண்ணி வீதி டிவி ல கிரிக்கெட் பார்த்துட்டு இருந்திருப்பான் போல..காரி துப்பிட்டான்.
ஐயயோ ,இதுக்கு பின்னாடி இவ்ளோ பிரச்சனையா னு பயந்து இந்த யோசனைய கிடப்புல போட்டேன் .
நல்ல வேலை,முன்னாடியே உண்மை தெரிஞ்சதால தப்பிச்சேன்.
பல ஆண்கள் இதனால் நொந்து போய்,டாஸ்மாக் போறாங்கலாம்.ஒரு சங்கமே(சீரியல் எதிர்ப்பு ) இருக்கு போல ?.தப்பி பிழைத்தேன்..

தொடரும் ....
அடுத்த யோசனை ..(யோசனை - 2,நாய்,பூனை  வளர்ப்பது எப்படி? )

Sunday, September 6, 2009

ஏர் இந்தியாவுல ஏன் யாரும் ஏறவில்லை

நேத்து தான் நியூஸ்ல பார்த்தேன் ..ஏர் இந்தியா விமானம் தீ பிடிச்சு  நின்னு போச்சாம்.அதுவும் நான் ரியாத்க்கு போன அதே விமானம். அப்பறம் எவன் ,எமனை தேட ஏர் இந்தியாவுல போவான்?

ரியாத்க்கு நானும் ஏர் இந்தியாவுல தான் போனேன்.பணம் என்னவோ  கம்மி தான் .ஆனா ?.
எல்லாருக்கும் ஒரு டிவி தனி தனியா இருந்துச்சு ,ஆனா முக்கால்வாசி டிவி ஓடவே இல்ல.
சர்வர் ப்ராபளம் என்ற மெசேஜ் மட்டும் தான் வந்துச்சு,படமும்  வரல பாட்டும் வரல. சரி விமான பணிப்பெண் கிட்ட சொல்லாம்னு பார்த்தா ,பணிப்பெண்க்கு பதிலா அவங்க அம்மா வருது .பாவம் இந்த வயசான காலத்தில அது என்ன பண்ணும் .அதான் ஒண்ணுமே பண்ணல.இறுதி வரை அந்த டிவி ஓடவா இல்ல.அந்த டிவி ல என்ன தான் ஓடுமோ என்ற கனவு ,நிராசை ஆகவே போச்சு .

நாலு பசங்க தான் எல்லா வேலையும் பாத்தாங்க.விமான பணிப்பெண் பற்றிய என் கற்பனைகள் எல்லாம் விபத்துல நொறுங்கி போன டாட்டா சுமோ போல் ஆச்சு.

ஆரம்பத்துல AC போடவே இல்ல.வேர்த்து கொட்டிடுச்சு..அப்பறம் டிவி ம் ஓடல ,பேப்பர் ம் ஹிந்தி,
பணிப்பெண் ம் ..வேணாம் ,அந்த துயர சம்பவத்தை நான் மறக்க முயற்சி செய்கிறேன்.
அதனால கொஞ்ச நேரம் கண்ணை மூடி கனவு கண்டிட்டு இருந்தேன்.
உடம்பு எல்லாம் கிடு,கிடு னு நடுங்குது.என்னடா இது ,இங்க வெயில் தானே பட்டய கிளப்பும் னு சொன்னாங்க னு பார்த்தா ?..வெளியுல மேகம் தான் தெரிஞ்சுது .உடனே HELP பட்டனை அழுத்தினேன் .ஆனா உடனே யாரும் வரவே இல்ல .உடனே மட்டும் இல்ல -கடைசி வரை ஒருத்தரும் வரல..
நடுங்கி கிட்டே போனேன்.

தொடரும்..




இது மட்டும் தானா ? இல்ல.

 இன்னும் இருக்கு..ஆனா இப்ப இல்ல ..!!
சென்னை'ல இருந்து ரியாத் போகவே நாலு மணி நேரம் தான் ஆகும் .ஆனா நம்ம  ஏர் இந்தியா குடுக்குது ஒரு அதி அற்புதுமான வழி(வலி ). ரியாத் --> டெல்லி --> மும்பை --> சென்னை ..வெளங்கிடும் ..
அந்த கடவுள் தான் என்னை  வரும் போது(நவம்பர் - 12) காப்பாத்தனும்.

12 ம் தேதி 10:45 க்கு கெளம்பி, அடுத்த நாள் காலை 3 மணிக்கு தான் சென்னை வரேன்.