Wednesday, November 4, 2009

இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !

என் தமிழ்நாடே ! உன் மனம் நிம்மதி அடைந்ததோ !
எஞ்சி இருந்த மானமும் மண்ணாகி போனதே !
நடை பிணமாய் வாழ்ந்தென்ன ! மனங்கேட்டவர்களே !
ஐம்பதுக்கும் ஐந்னுருக்கும் இனத்தை அடமானம் வைத்தீர்களே !
பிரபாகரன் என்ன அவனது குடும்பத்தை வளர்த்தானா?
உன் இனத்துக்கும் மனிதாபிமானத்துக்கும போராடி பொறுமை காத்தான்!
மண்ணுக்கும் பொன்னுக்கும் போராடவில்லை !
உன் இன பெண்களுக்காக போராடினான்!
உன்னிடம் உயிர் பிச்சை கேட்டனா ?
தமிழினத்தின் மறு பிழைப்புக்கு பிச்சை கேட்டான் !
மாற்ற நாடுகள் உதவிட முன்வந்ததே ! நீ எங்கே சென்றாய் !
ஓ ! உனக்கு தான் உன் குடும்பத்தை கவனிக்க வேண்டுமே !
ராஜீவ் என்ற ஒரு உயிருக்கு பல ஆயிரம் உயிர்களா?
மானமுள்ள தமிழனே உயிர் உனதல்ல முன்னவர்கள் இல்லையேல்!
நன்றி கெட்ட மனிதா! நாட்டை அயல்நாட்டவனுக்கு அடமானம் வைத்தாயே!
காட்டி கொடுக்கும் கயவனை கையமர்த்தினாயே!
உயிர் கொடுத்த தமிழ் தாயை தத்து கொடுத்து, கொன்றாயே!
உனக்கும் சாவு மணி அடிக்கிறது, அறிவிலியே !
அயர்ந்து தூங்குகிராயோ! அழிந்து போனது உன் சந்ததி!
அழிவு நடக்கட்டும்! மானமுள்ளவர்கள் மரிக்கட்டும் !
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !
நீ உன் வேலையை பார் ! உனக்கு எதற்கு அயல் நாட்டு பிரச்சனை எல்லாம் !!

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.