Friday, August 27, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -முள்ளம்பன்றியின் முடிவு - தொடர்ச்சி ( 2 )

முன்கதை:
http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html

முன்கதை சுருக்கம்:

சென்னைக்கு வந்த கிராமத்து மாணவன்,பெண்கள் தன்னை மதிக்காமல்-மிதிப்பது எண்ணி வருந்தி,தன் நண்பனிடம் ஆலோசனை கேட்கிறான்.
நண்பன் முதலாவதாக சொன்ன அறிவுரை,சிகை அலங்காரம்(அலங்கோலம் என்றும் சொல்லலாம்,தப்பில்லை).

தொடர்ச்சி:


"டேய்,வினோத்கன்னா,இந்த spike (முள்ளு முடி (எ) முள்ளம்பன்றி ) ஒரு மாதிரி தலை அரிக்கற மாதிரி இருக்குடா,என்ன பண்ண?"
"சும்மா வாடா,,அதெல்லாம் சரியா போய்டும்"
"எனக்கு வேற பயமா இருக்குடா,என் வீட்டு ஓனர் இத பாத்தா என்ன நினைப்பார்னே  தெரியல?,உனக்கு ஒன்னு தெரியுமா?,
அவருக்கு ரெண்டு பொண்ணுங்க,எந்த bachelor கும் வீடு கிடையாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா இருந்தார்,என்னை நம்பி தான் வீடே கொடுத்தார்,அதான்.."
"அவரு என்ன நினைச்சிருப்பாருனா,   உன்ன மாதிரி ஒரு மூஞ்சிய,எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுனு தைரியமா வீட்ட கொடுத்திருப்பாரு."
  "?"
ஒரு வேலை இவன் சொன்னது தான் உண்மையோ?,தெரியலை.


"டேய்,ரோட்ல எல்லோரும் என்னையே பாக்கிற  மாதிரி இருக்குடா."
"அதெல்லாம்,மன பிராந்தி,கண்டுக்காத மச்சான்,எப்படியோ சக்சஸ்,முடி செட் ஆயிடுச்சு."
"ஏன்டா,இந்த முள்ளம்பன்றி வச்சி இன்னும் அரை மணி நேரம் கூட ஆகல,அதுக்குள்ள?"

"மச்சா,அங்க பாரு அந்த ரெண்டு ஸ்கூல் பொண்ணுங்க,உன்னை பாத்து சிரிக்குது"
"ஏன்டா ,என்ன காலேஜ் பொண்ணுங்க கிட்ட ஹீரோ ஆக்குடானு சொன்னா,,நீ என்னை ஸ்கூல் பொண்ணுங்க கிட்ட காமடியன் ஆக்கிட்டியேடா பாவி,படுபாவி  ".
"கவலை படாத மாப்பு,,இது தான் பர்ஸ்ட் ,நெக்ஸ்ட் தான் பெஸ்ட்.!!! "






"ஆமா,இந்த ஸ்டைல் சரியா?இல்ல ஆப்பானு எப்படி கண்டு பிடிக்கறது?"
"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு,அந்த கடையில போய் வாழைப்பழம்  என்ன விலைனு  கேட்டுட்டு வந்திரு "
"எதுக்குடா?"
"சொன்னதை செய்,அப்புறம் சொல்றேன்"


கடையில்
"அண்ணா,பழம் எவ்வளவு?"
"4 ரூவா"
"வேண்டாம்."

"வினோத் கண்ணா,அந்த பழம் நாலு ரூபாய் யாம்டா,கொடுமை,நம்ப ஊர்ல இந்த விலைக்கு செவ்வாழை  பழமே வாங்கலாம்"
"மச்சான்,சக்சஸ் ,,,சக்சஸ் "
"என்னடா? அவன் பழம் நாலு ரூபாய் னு சொன்னதுக்கும்,சக்சஸ் க்கும் என்னடா சம்பந்தம்? "
"இருக்கு டா,இருக்கு..
மெட்ராஸ் ல  வாழபழம் விலை எப்படி தெரியுமா,, லுங்கி கட்டிக்கிட்டு போனா - 2.00, பேண்ட்டு போட்டுட்டு போனா - 2.50,
பேண்ட்டு போட்டுட்டு பைக்கில் போனா - 3.00 ,கார்ல போனா - 3.50,கம்பெனி ஐடி  கார்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைல்,கிருதாவோட போனா 4.00..உனக்கு 4  தான சொன்னாங்க,அப்ப நீ முன்னேறிட்ட. "

"நெசமா வாடா?,அப்புறம்,இந்த மாதிரி முடி வெட்டிகிட்டா மட்டும் பொண்ணு பாக்குமா?,ஏன்?,எதுக்கு?"
"அது ஒன்னும் இல்ல, இந்த மாதிரி  முடி வெட்டிக்க காரணமே,என்கிட்ட பணம் இருக்குனு பந்தா காட்டத்தான்..பல பொண்ணுங்களுக்கு என்ன தேவை.?செலவு பண்ண ஏமாந்து போனா நம்மள மாதிரி நாலு ஜீவன்,அவ்வளவு தானே,அதுக்கான சிக்னல் தான்,இந்த கட்டிங்"
"ஒஹ்,,அப்படியா சேதி ..ஆமாண்டா ..நம்ம ஊர்ல,ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருந்துகிட்டு,இங்க அரை குறை டிரஸ் போட்டுக்கிட்டு திரியுது"

"சரி,முடி ஓக்கே,அடுத்து ஐகிளாஸ் தான் மாத்தனும்"

"ஐயயோ,கண்ணாடி கழட்டின்னா,எனக்கு கண்ணு தெரியாதே?"
"அப்போ, லென்ஸ் போட்டுக்கோ"
"போடா வெண்ணை,அந்த லென்சை  காலை,மாலை ரெண்டு நேரமும் கழுவனும்,அப்புறம் கண்ண தேய்க்க கூடாதாம்,கசக்க  கூடாதாம்,ஏகப்பட்ட கண்டிஷன் வேற,எனக்கு அந்த கிரகம் வேண்டாம்."
"சரி விடு,fast track கிளாஸ் போட்டுடலாம்"


"எவ்ளோ விலை வரும்"
"என்ன கொஞ்சம் லோ ரேட்னா 2000 வரும் "
ஸ்...ப்பா..இப்பவே கண்ணை கட்டுதே.








Thursday, August 19, 2010

சென்னையில் ஒரு வெண்ணை

நம்மள எப்படி கிராமத்தான் னு கண்டுபிடிக்கறாங்கனே தெரியல?.


அதனால ஒரு ஆராய்ச்சியில் இருக்கேன்.என்ன ஆராய்ச்சி தெரியுமா?.ஏன் என்கிட்ட மட்டும் எந்த பொண்ணும் பேச மாட்டேங்கிதுன்னு .
இல்ல இல்ல ,பாக்கவே மாட்டேன்னு போகுதுன்னு.
நான் ஒன்னும் பாக்க ரொம்ப கொடுமையானவனும் கிடையாது. அப்புறம் ஏன்?.
என்ன விட மகா மட்டமான மடையன்கள் கூட மன்மதனா சுத்துறாங்க,ஆனா நான்- ஹ்ம் வேண்டாம்.
ஒரு பையன் ,முக்கியமா ஒரு பொண்ணும் நம்மள மதிக்கறதே இல்ல.

உண்மை அறிய,இதில் பலவித வெற்றி கண்ட வினோத் கண்ணனை நாடினேன்.
அவன் சொன்ன வழிமுறைகள்  எனக்கு வலி முறைகள் ஆகவே தெரியுது.என்ன செய்ய?,..கொஞ்சம்  முயன்று தான் பார்ப்போமே.

மாற்றம் - 1 ,முதல் கோணல் முற்றிலும் கோணல்.

டேய் என்னடா ஹேர் ஸ்டைல்  இது? 80 ல ஹிந்தி ஹீரோ வச்ச மாதிரி..change டா என்றான்.
எங்க ஊர்ல இப்படி  தண்டா  வெட்டுவாங்க.நான் என்ன பண்ண?,அதுவும் தலைக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சா நல்லதுன்னு பழகிட்டேன்டா.மாத்த முடியாதுடா.
போடா டுபுக்கு..மொதல்ல நான் சொல்ற மாதிரி செய்,அப்புறம் பாரு.

அவனே ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான்.கடை பேரு "கருப்பு-வெள்ளை".

கடைல ஒரு லிஸ்ட் படத்தை காட்டினாங்க,,உண்மைய சொல்லணும்னா ஒன்னு கூட நல்லாவே இல்ல.
எல்லாம் முடி வெட்டறப்ப பாதில ஓடி வந்தவனுங்க தலை மாதிரி இருந்துச்சு.

கடைசியா வேற வழியில்லாம "முள்ளம் பன்றி" யை செலக்ட் செஞ்சேன்.அது பேரு "spike". கொடும.
எங்க ஊரு ரவி பார்பர் இத பாத்தா,தொழிலையே விட்டுருவார்..அவ்வளவு மோசம்.


150 rs சார்,,ஐயோ,,நம்ம ஊருல ரெண்டு வருசத்துக்கே அவ்வளவு தானே..(10 *15 -150 ).ஆமா இப்படி குருவி கூடு மாதிரி நிக்குதே,எவ்வளவு நேரம் நிக்கும்,தலைக்கு குளிச்சா படுத்திறாது..
you should use hair gell da.

அப்ப தேங்கா எண்ணெய்?,ஊருல இருந்து ஆட்டி வந்தது இன்னும் அரை லிட்டர் இருக்கே?
அதை தூக்கி மொதல்ல வெளிய வீசு.
ஆமா,ஹேர் gell தெனமும் போடணுமா?
ஆமா ,daily two times .
அது எவ்ளோ விலை?.
என்ன,ஒரு fifty rs இருக்கும்.

ஐயோ,இப்ப புரிஞ்சு  போச்சு டா.
என்ன?
நம்ம சாப்ட்வேர் கம்பெனில எதுக்கு அதிகமா சம்பளம் தராங்கனு.
ஆமாடா,இதுக்கே தான்.

சரி,இன்னொரு சந்தேகம்,தலையில ஹெல்மெட் எப்படி போடுறது?
ஹெல்மெட் போட்டா hairstyle எப்படி தெரியும்.போடவே கூடாது.
இப்பவே தலை சுத்துதே.








தொடரும் ..


http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html#comments