Friday, August 27, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -முள்ளம்பன்றியின் முடிவு - தொடர்ச்சி ( 2 )

முன்கதை:
http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html

முன்கதை சுருக்கம்:

சென்னைக்கு வந்த கிராமத்து மாணவன்,பெண்கள் தன்னை மதிக்காமல்-மிதிப்பது எண்ணி வருந்தி,தன் நண்பனிடம் ஆலோசனை கேட்கிறான்.
நண்பன் முதலாவதாக சொன்ன அறிவுரை,சிகை அலங்காரம்(அலங்கோலம் என்றும் சொல்லலாம்,தப்பில்லை).

தொடர்ச்சி:


"டேய்,வினோத்கன்னா,இந்த spike (முள்ளு முடி (எ) முள்ளம்பன்றி ) ஒரு மாதிரி தலை அரிக்கற மாதிரி இருக்குடா,என்ன பண்ண?"
"சும்மா வாடா,,அதெல்லாம் சரியா போய்டும்"
"எனக்கு வேற பயமா இருக்குடா,என் வீட்டு ஓனர் இத பாத்தா என்ன நினைப்பார்னே  தெரியல?,உனக்கு ஒன்னு தெரியுமா?,
அவருக்கு ரெண்டு பொண்ணுங்க,எந்த bachelor கும் வீடு கிடையாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா இருந்தார்,என்னை நம்பி தான் வீடே கொடுத்தார்,அதான்.."
"அவரு என்ன நினைச்சிருப்பாருனா,   உன்ன மாதிரி ஒரு மூஞ்சிய,எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுனு தைரியமா வீட்ட கொடுத்திருப்பாரு."
  "?"
ஒரு வேலை இவன் சொன்னது தான் உண்மையோ?,தெரியலை.


"டேய்,ரோட்ல எல்லோரும் என்னையே பாக்கிற  மாதிரி இருக்குடா."
"அதெல்லாம்,மன பிராந்தி,கண்டுக்காத மச்சான்,எப்படியோ சக்சஸ்,முடி செட் ஆயிடுச்சு."
"ஏன்டா,இந்த முள்ளம்பன்றி வச்சி இன்னும் அரை மணி நேரம் கூட ஆகல,அதுக்குள்ள?"

"மச்சா,அங்க பாரு அந்த ரெண்டு ஸ்கூல் பொண்ணுங்க,உன்னை பாத்து சிரிக்குது"
"ஏன்டா ,என்ன காலேஜ் பொண்ணுங்க கிட்ட ஹீரோ ஆக்குடானு சொன்னா,,நீ என்னை ஸ்கூல் பொண்ணுங்க கிட்ட காமடியன் ஆக்கிட்டியேடா பாவி,படுபாவி  ".
"கவலை படாத மாப்பு,,இது தான் பர்ஸ்ட் ,நெக்ஸ்ட் தான் பெஸ்ட்.!!! "






"ஆமா,இந்த ஸ்டைல் சரியா?இல்ல ஆப்பானு எப்படி கண்டு பிடிக்கறது?"
"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு,அந்த கடையில போய் வாழைப்பழம்  என்ன விலைனு  கேட்டுட்டு வந்திரு "
"எதுக்குடா?"
"சொன்னதை செய்,அப்புறம் சொல்றேன்"


கடையில்
"அண்ணா,பழம் எவ்வளவு?"
"4 ரூவா"
"வேண்டாம்."

"வினோத் கண்ணா,அந்த பழம் நாலு ரூபாய் யாம்டா,கொடுமை,நம்ப ஊர்ல இந்த விலைக்கு செவ்வாழை  பழமே வாங்கலாம்"
"மச்சான்,சக்சஸ் ,,,சக்சஸ் "
"என்னடா? அவன் பழம் நாலு ரூபாய் னு சொன்னதுக்கும்,சக்சஸ் க்கும் என்னடா சம்பந்தம்? "
"இருக்கு டா,இருக்கு..
மெட்ராஸ் ல  வாழபழம் விலை எப்படி தெரியுமா,, லுங்கி கட்டிக்கிட்டு போனா - 2.00, பேண்ட்டு போட்டுட்டு போனா - 2.50,
பேண்ட்டு போட்டுட்டு பைக்கில் போனா - 3.00 ,கார்ல போனா - 3.50,கம்பெனி ஐடி  கார்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைல்,கிருதாவோட போனா 4.00..உனக்கு 4  தான சொன்னாங்க,அப்ப நீ முன்னேறிட்ட. "

"நெசமா வாடா?,அப்புறம்,இந்த மாதிரி முடி வெட்டிகிட்டா மட்டும் பொண்ணு பாக்குமா?,ஏன்?,எதுக்கு?"
"அது ஒன்னும் இல்ல, இந்த மாதிரி  முடி வெட்டிக்க காரணமே,என்கிட்ட பணம் இருக்குனு பந்தா காட்டத்தான்..பல பொண்ணுங்களுக்கு என்ன தேவை.?செலவு பண்ண ஏமாந்து போனா நம்மள மாதிரி நாலு ஜீவன்,அவ்வளவு தானே,அதுக்கான சிக்னல் தான்,இந்த கட்டிங்"
"ஒஹ்,,அப்படியா சேதி ..ஆமாண்டா ..நம்ம ஊர்ல,ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருந்துகிட்டு,இங்க அரை குறை டிரஸ் போட்டுக்கிட்டு திரியுது"

"சரி,முடி ஓக்கே,அடுத்து ஐகிளாஸ் தான் மாத்தனும்"

"ஐயயோ,கண்ணாடி கழட்டின்னா,எனக்கு கண்ணு தெரியாதே?"
"அப்போ, லென்ஸ் போட்டுக்கோ"
"போடா வெண்ணை,அந்த லென்சை  காலை,மாலை ரெண்டு நேரமும் கழுவனும்,அப்புறம் கண்ண தேய்க்க கூடாதாம்,கசக்க  கூடாதாம்,ஏகப்பட்ட கண்டிஷன் வேற,எனக்கு அந்த கிரகம் வேண்டாம்."
"சரி விடு,fast track கிளாஸ் போட்டுடலாம்"


"எவ்ளோ விலை வரும்"
"என்ன கொஞ்சம் லோ ரேட்னா 2000 வரும் "
ஸ்...ப்பா..இப்பவே கண்ணை கட்டுதே.








3 comments:

  1. வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் கொடுத்தமைக்கு நன்றி... தங்களுக்கான பேனரை தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளேன். கிடைத்ததா என தெரியப்படுத்தவும். நன்றி...

    ReplyDelete
  2. //மெட்ராஸ் ல வாழபழம் விலை எப்படி தெரியுமா,, லுங்கி கட்டிக்கிட்டு போனா - 2.00, பேண்ட்டு போட்டுட்டு போனா - 2.50,
    பேண்ட்டு போட்டுட்டு பைக்கில் போனா - 3.00 ,கார்ல போனா - 3.50,கம்பெனி ஐடி கார்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைல்,கிருதாவோட போனா 4.00..//

    Classic.. great point.

    //"அது ஒன்னும் இல்ல, இந்த மாதிரி முடி வெட்டிக்க காரணமே,என்கிட்ட பணம் இருக்குனு பந்தா காட்டத்தான்..பல பொண்ணுங்களுக்கு என்ன தேவை.?செலவு பண்ண ஏமாந்து போனா நம்மள மாதிரி நாலு ஜீவன்,அவ்வளவு தானே,அதுக்கான சிக்னல் தான்,இந்த கட்டிங்"//

    இது ரொம்ப ஓவரா இல்லே ?
    வேணாம்.. நா பாவம்.. அழுதுடுவேன்..

    ReplyDelete
  3. //"சரி விடு,fast track கிளாஸ் போட்டுடலாம்"
    "எவ்ளோ விலை வரும்"
    "என்ன கொஞ்சம் லோ ரேட்னா 2000 வரும் "//


    அது கிளாஸ் விலை இல்ல!!!??? ஃபிரேமோட விலை???!!!!!

    http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.