Wednesday, June 15, 2011

பேச்சுரிமை

நான் அப்படி
நடந்திருக்ககூடாது..
நண்பனை திருப்திபடுத்தியிருக்க வேண்டும்..
என்னுடைய அவமானங்களை
அன்று ஏற்றிருக்கலாம்..
எனக்கு எவ்வளவோ உதவியிருக்கிறான்,
அதை மதித்திருக்கலாம்..
இப்படி குழப்பங்கள் கூட கூட,
என் குரல்வளை இறுக்கமாகிறது..
உறவுகள் குரலை இறுக்குமாயின்..
என் குரல்வளை போதும்..
நான் நானாகவே இருக்கவிளைகிறேன்..