Thursday, December 9, 2010

எனது கவிதைகள்

கடந்த ஒரு வருடத்தில் நான் எழுதிய கவிதைகளின்(கவிஞர்கள் மன்னிக்க) தொகுப்பு.ஒரு பத்து கவிதைகளை மட்டும் காணவில்லை.

December – 03-2010

எனது நண்பன் ராஜேஷ் விமானத்தில் சென்றது பற்றி.

எருமை என்று அழைத்தவர் எல்லாம்
சிறுமை கொள்ள - எள்ளி நகைத்தவர் எல்லாம்
எண்ணி வியக்க,பெருமையாய் எங்கள் அண்ணன் 
விமானம் ஏறி - அவமானம் தவிர்த்து , தன்மானம் காத்தாரே.



November -20-2010 
 
 
சும்மா,, 
 
கவிதை வந்தால் தான் ,காதலும் வரும் என்கிறாய்.
நான் என்ன கண்ணதாசனா,கவிதையை கொட்ட.
கொடுமை,உன்னை புகழ வேண்டும்,அது தானே உன் எண்ணம்.
எழுதி தொலைக்கிறேன்...

 
நீ காண,ஒரு மணி நேரம் செலவு செய்து
நான் வைத்த spike யை,ஒரு நொடியில் கலைத்து விட்டேன்.

உனக்கு முன் உன் அம்மா பார்த்ததால்.

November -18-2010

வாழ்த்து மடல் - வருத்தபடா வாலிபர் சங்க புது தலைவர்- "டான்" ரவி.

சங்கத்தை காக்க வந்த எங்கள் சிங்கமே,சிறுத்தையே,
வானின்றி அமையாது உலகு-இனி
டான் இன்றி திறவாது சங்கத்தின் கதவு ,
மாரி வந்தாலும்,தலைவர் மாறி வந்தாலும்
வந்தோர்க்கெல்லாம் வாழ்வளிக்கும், எங்களின்
"
வருத்தபடா வாலிபர் சங்கமே"

November-3-2010

அண்ணன் அசோக்குமார்(ஆட்டையாம்பட்டி ) பற்றி

பொய் :

அறிவில் சிறந்தவனே,
அழகின் மன்மதனே,
அன்பின் அரசனே -அசோகனே,நீ இல்லையேல்
ஆதரவு அற்றோருக்கு ஆளில்லையே !!!
 
மெய்:

அறிவில் சிறுத்தவனே,
அழகின் மண்-மதனே,
பிணியின் பினக்கே - அசோகனே,நீ இல்லையேல்
வருத்தபடா வயோதிகர் சங்கத்திற்கு ஆளில்லையே !!!

November-3-2010
("டான்" ரவி)

ரவி எண்ணின் சூரியன் என்று பொருள்,
இவரோ - சூரிய உதயத்தை கண்ணால் காணாதவர்.

ஆறு மணி வந்தும் அண்ணன் அசரவில்லை.
ஏழு மணி ஆகியும் எழுந்திரிக்கவில்லை.

மணியோ பத்து-
எழுந்தார்,அறுசுவை உணவு உண்டார்.
எடுத்தார் பையை - ஒரு புறமாய் மாட்டிகொண்டு,
வங்கி அலுவலர் போலே - வீதியிலே வந்தார்.

தொடரும்...

November-2-2010
Written by me for my friend Pradeep(poongothai),


மேதையாக இருந்த என்னை
பேதையாய் ஆக்கியவளே
என்னவளே - என் கோதையே - பூங்கோதையே,
உன் பூவிழி பார்வையில்,
பூலோகம் மறந்தேனே.

பூ இருக்குமிடம் தான் தேனும் இருக்கும்,
அந்த தேனை தேடி தானே தேனீக்கள் திரியும் ,
பூவாக இருப்பது நீ - பூங்கோதை,
தேனியாக அலைகிறேன் நான்,
தேனாய் இருப்பது - நம் காதல்.

பிரியமுடன் பிரதீப்.


August-9-2010
(அண்ணன் ஜெயக்குமார் (எ) குட்டி )

தேடாத தெருவில்லை , கானாத கன்னி இல்லை,
ஒன்றும் ஓட்ட வில்லை, ஆயினும் நன்றே,
ஆடி வந்தது,அதிர்ஷ்டமும் வந்தது,
அண்ணி 
கிடைச்சிட்டாங்க -
அண்ணனை ஆட்டி படைக்க.

மூன்று உண்மையும் கேட்ட பின்னரும்,சொன்னாங்களாம் -
அவரை ஆக்குவேன் நன்று என்று .



June-10-2010
(About chakkaravarthy -- எல்லாம் பொய்..company farewell காக சும்மா )

இவர் பெயர் மட்டும் இனிக்கா
செயலும் இனிக்கும் - சர்க்கரை

கொண்ட நட்பிற்காக
தன் உயிரையும் தருவர் - வர்த்தி ,மெழுகுவர்த்தி

செயல் என்று வந்தால்
புயல் போல் சுழல்வார் - சக்கரம்

வரம் வேண்டுமா என்றால்
வேண்டாமே என்று சிரம் அசைப்பார் ,
ஏன் என்றால் ?
இரு கரம் அல்ல -எனக்கு முக்கரம் உண்டு என்பார்,
எப்படி என்றேன்?
இப்படி என்றார் ,
சக்-கர-வர்த்தி என்றார்.


மொத்தத்தில்,
அல்லல் படும் அடியவர்க்கு அள்ளி தரும்
அரசர் இவர் - சக்கரவர்த்தி 

 
June-04-2010
(about Tharik)

தாரிக்கை நோக்கி...

பால் குடிக்கும் பாலகனா நீ?
இல்லை,கள் குடிக்கும் கள்ளன் நீ.

உண்மை பேசும் உத்தமனா நீ?
உண்மையையே பேசாத ஊர்சுற்றி நீ.

உலகம் அறியா அப்பாவியா நீ?
இல்லை,பல ....


June-04-2010
(About Chakkaravarthy,எல்லாம் பொய்..company farewell காக சும்மா )

மலர்களில் சிறந்ததாம் மல்லிகை,
குல தொழிலோ மளிகை ,
மனமோ வசந்த மாளிகை.

முல்லைக்கு தேர் தந்த பாரி,
உன்னாலே,வானம் பொழியுது மும்மாரி.



June-1-2010 (about me)

Openbravo என்ற ஒரு சொல்லை வைத்து,
பிழைப்பை ஓட்டுபவனே..

ஒன்றும் அறியாமல் இருந்தும்,ஊரை ஏமாற்றும்
ஒப்புக்கு சப்பாணியே !! !

ஈராண்டுகள் ஆன பின்னும்,ERP அறியாமல்
இளித்து கொண்டிருக்கும் இளிச்சவாயனே !!!

இனியாவது விளையாட்டை விட்டு வேலையை பார்,

இனியும் இளித்து கொண்டிருந்தால் , ஈராண்டுகள் அல்ல,
ஈரேழு ஆண்டுகள் ஆனாலும் உனக்கு ERP விளங்காது.

இப்படிக்கு உன் மனசாட்சி.


June-01-2010
(love)

உன் ரத்த நிற இதழ் தனில் - என் இதயம் இழந்தேன்,
உன் பசுமை நிற தலை தனில் - என் பசியை மறந்தேன்,
உன் உடலமைவு தனில் - ஒரு புது உலகம் கண்டேன்,
ஆனால்,
உன் கூர் முள் குத்தியதில்,என் பொறுமையை இழந்தேன்- ரோஜா செடியே




வாழ்க்கை வாழ,

சிரித்து விடு அல்லது சிந்தித்து விடு,
பேசி விடு அல்லது பேச விடு,
போராடி விடு அல்லது ஓடி விடு,
சுருக்கமாய் சொல்கிறேன் -
வாள் பிடி அல்லது வாலை பிடி.

May-28-2010

உன்னை காணவே காலை வந்தேன்,ஆனால் நீ வரவில்லை.
மாலை வரை காத்து கிடக்கிறேன் , ம் , நீ வரவில்லை.
தேடினேன்,மாற்றினேன்,மன்றாடினேன் ,நீ மட்டும் வரவேயில்லை,
நீ வராதது குறித்து வருந்தவில்லை,ஆனால் அவன் பார்த்தவுடன் வந்துவிட்டாயே,
ஏன் ,
என் மேல் குற்றமோ? அல்லது நான் கொண்ட code ன் குற்றமோ?
என் அன்பு output யே ..

May-13-2010
About Manavalan

மண்ணை ஆழ பிறந்த மன்னனே,
மாதர் தம் மனதை கொள்ளை கொண்ட மன்மதனே ,
மனை ஆழ போகும் எங்கள் மண்ணின் மைந்தனே,
மணவாள மாமுனியே ! உன் மனை வாழிய ,வாழியவே !

About Manu marriage
மாந்தர் வந்தனர், 
மகளிர் வந்தனர், 
மணமாலை வந்தது, 
கூடவே மழையும் வந்தது. 

காலை போனது மாலை வந்தது, 
மழை விட்ட பாடில்லை. 

மழை சொன்னது,மணாளனை வாழ்த்த வந்தேன் என்று, 
(திரு) மலை சொல்கிறேன்,இன்று முதல் இவர் வாழ்வில் புயல் வீசும் என்று.

About Eswar-by lover Marakatham
என்னை கொள்ளை கொண்டதே,
என்னவரின் சிரத்தின் ஒளிவட்டம்.
ஈஸ்வரனை நாடியே - ஈசனை வேண்டினேன்,
மரகதகல் வேண்டாமே ,என் நாதனின் மாங்கல்யம் போதுமே.

About my lover:

உன் கொலுசு ஓசை கேட்க கோடி காதுகள் வேண்டுமடி,
உன் வளையல் ஓசை கேட்டுகொண்டிருக்க வயது நூறு வேண்டுமடி,
ஆனால் காதல் கடிதம் தந்தவனுக்கு கன்னத்தில் ஒன்று தந்தாயே -அதில் இருந்து,
எவ் ஓசையும் கேட்கவில்லையம்மா ,உன் செருப்போசை தவிர்த்து...

love failure;

வாழ்வே மாயம் என்ற வகையில்,
சாவே மேல் என்ற நிலையில்,
துன்பமும் ,துயரமுமாய் துவண்டு விட்ட வேலையில்,
உன்னை சந்தித்தேன்.
உன்னை அனைத்ததினால்,இவை அனைத்தையும் மறந்து விட்டேன்,
என் அன்பு மதுவே.


May-12,,
Love

கவிதை எழுத சொன்னாய்,கவிதைகளோடு வந்தேன்.
கடிதம் எழுத சொன்னாய்,கடிதங்களோடு வந்தேன்.
கரம் பிடிப்போமா என்றாய்,இரு கரம் பிடிப்போம் என்றேன்.
மறந்து விடு என்றாய்,மருந்து விட்டேன்-உலகை மறந்து விட்டேன்.
நன்றி - டாஸ்மாக் .


Sincere love:


நானும் காதலித்தேன்,
பூச்செடியையும் ,
பூனையையும் ,
புறாவையும்,
இந்த மூன்றை வளர்க்கும் பூங்கொடியையும் அவள் தங்கச்சியையும்.

My lover::

அவள் கண் இமைகள் இன்று கார்மேகமாய் தெரிகின்றன,
அவள் கன்னங்கள் இன்று கனியாக தெரிகின்றன,
அவள் அழகில்லை ,,ஆனால் அழகாய் தெரிகிறாள்,
எப்படி?
அவளை அழகாக்கினேன், போட்டோஷாப்(Photoshop CS5) ன் உதவியுடன்.


Jan-2
(குடிமகன்)

தண்ணி இல்லாமல் தண்ணி அடிப்பவனே,
full
யை full யாக அடிப்பவனே,
மூன்று வேளையிலும் முதன் வேலையாய் சரக்கை போடுபவனே,
தங்கத்தை(GOLDEN GRAPE) அங்கமாய் கொண்டவனே,
பகலில் உன் முன் monitor ,
இரவிலோ உன்னுள் monitor .
 


Saturday, October 30, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -spike இல்ல bike-தொடர்ச்சி (3)

என்னை பார்த்த வினோத் கண்ணன் அதிர்ச்சி அடைந்தான்.

"டேய், என்னடா spike யை எடுத்திட்ட? ஏன்டா? " என்றான் கண்ணன்.
"என்னால முடியல,,அந்த முள் முடி ரெண்டு நாள் நேரா நின்னுச்சு,அப்புறம் கோணல்,மாணல் ஆயிடிச்சு..
அதான் அந்த கிரீம் எல்லாம் போட்டும் கூட ,ரெண்டு மணி நேரம் மேல  நிக்க மாட்டேன்கிறது.பாவம்டா பசங்க,இதை வச்சி எப்படித்தான் பொழப்ப ஒட்டுறாங்களோ,,அப்பா..
வேற ஐடியா சொல்லுடா " என்றேன்.
"இருக்கு,கவலைபடாதே "என்றான்.

என்ன ஐடியா?

spike இல்ல bike

"பைக் இருக்கா?"என்றான்
"இருக்கே."
"என்ன பைக்?"
"டிவிஎஸ் ஸ்டார்"
"ஸ்டார் சிட்டி னா ஒகே,ட்ரை பண்ணலாம்"
"மச்சான்,ஸ்டார் சிட்டி இல்ல,,வெறும் ஸ்டார்,,புல்லெட் வண்டி மாதிரி இருக்குமே அது,,ஓகே வா? "
"வெளங்கிடும்,,டேய் ,யூத் ஓட்ற வண்டியாடா அது? "
"ஏன்?அதுக்கென்ன குறைச்சல்,நல்லா தானே இருக்கு."என்றேன்.
"வெங்காயம்,,அவன்,அவன் pulsar ,apache ,yamaha ,,னு சுத்தறான்,நீ சுத்த வேஸ்ட், "
"ஏன்?அந்த பைக்ல எல்லாம்  அப்படி என்னதான் ஸ்பெஷல்?"
"இருக்கே,அந்த பைக்ல back seat எல்லாம் எப்படி இருக்கும்னு பாத்து இருக்கிறியா?பழனி படிக்கட்டு மாதிரி நெத்து குத்தலா இருக்கும்,யாராவது பின்னாடி உட்காந்தா,முன்னாடி இருக்கிறவன் மேல முழுசா சாஞ்சு விழுவாங்க,,இது போதாதா?,,அப்புறம் போதா குறைக்கு,ரோடு குழி,டிராபிக் னு பல வசதிகள் வேற நம்ம சென்னைல..நீயும்,வண்டி வச்சிருக்கிற பாரு,பை பாஸ் ரோடு மாதிரி."
"ஒண்ணும் புரியலையே"என்றேன்.

ஆராய்ச்சியின் விளக்க படங்கள்








கொஞ்சம் யோசித்து பார்த்தேன்,உண்மை விளங்கியது.

Wednesday, September 29, 2010

வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் போட்டி

வலைமனையில் போட்டோ கமென்ட்ஸ் போட்டியில் கமென்ட் கொடுத்து வெற்றி பெற்று விட்டேன்.

http://valaimanai.blogspot.com/2010/09/blog-post_20.html

Friday, August 27, 2010

சென்னையில் ஒரு வெண்ணை -முள்ளம்பன்றியின் முடிவு - தொடர்ச்சி ( 2 )

முன்கதை:
http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html

முன்கதை சுருக்கம்:

சென்னைக்கு வந்த கிராமத்து மாணவன்,பெண்கள் தன்னை மதிக்காமல்-மிதிப்பது எண்ணி வருந்தி,தன் நண்பனிடம் ஆலோசனை கேட்கிறான்.
நண்பன் முதலாவதாக சொன்ன அறிவுரை,சிகை அலங்காரம்(அலங்கோலம் என்றும் சொல்லலாம்,தப்பில்லை).

தொடர்ச்சி:


"டேய்,வினோத்கன்னா,இந்த spike (முள்ளு முடி (எ) முள்ளம்பன்றி ) ஒரு மாதிரி தலை அரிக்கற மாதிரி இருக்குடா,என்ன பண்ண?"
"சும்மா வாடா,,அதெல்லாம் சரியா போய்டும்"
"எனக்கு வேற பயமா இருக்குடா,என் வீட்டு ஓனர் இத பாத்தா என்ன நினைப்பார்னே  தெரியல?,உனக்கு ஒன்னு தெரியுமா?,
அவருக்கு ரெண்டு பொண்ணுங்க,எந்த bachelor கும் வீடு கிடையாதுன்னு ஸ்ட்ரிக்ட்டா இருந்தார்,என்னை நம்பி தான் வீடே கொடுத்தார்,அதான்.."
"அவரு என்ன நினைச்சிருப்பாருனா,   உன்ன மாதிரி ஒரு மூஞ்சிய,எந்த பொண்ணுக்கும் பிடிக்காதுனு தைரியமா வீட்ட கொடுத்திருப்பாரு."
  "?"
ஒரு வேலை இவன் சொன்னது தான் உண்மையோ?,தெரியலை.


"டேய்,ரோட்ல எல்லோரும் என்னையே பாக்கிற  மாதிரி இருக்குடா."
"அதெல்லாம்,மன பிராந்தி,கண்டுக்காத மச்சான்,எப்படியோ சக்சஸ்,முடி செட் ஆயிடுச்சு."
"ஏன்டா,இந்த முள்ளம்பன்றி வச்சி இன்னும் அரை மணி நேரம் கூட ஆகல,அதுக்குள்ள?"

"மச்சா,அங்க பாரு அந்த ரெண்டு ஸ்கூல் பொண்ணுங்க,உன்னை பாத்து சிரிக்குது"
"ஏன்டா ,என்ன காலேஜ் பொண்ணுங்க கிட்ட ஹீரோ ஆக்குடானு சொன்னா,,நீ என்னை ஸ்கூல் பொண்ணுங்க கிட்ட காமடியன் ஆக்கிட்டியேடா பாவி,படுபாவி  ".
"கவலை படாத மாப்பு,,இது தான் பர்ஸ்ட் ,நெக்ஸ்ட் தான் பெஸ்ட்.!!! "






"ஆமா,இந்த ஸ்டைல் சரியா?இல்ல ஆப்பானு எப்படி கண்டு பிடிக்கறது?"
"அதுக்கும் ஒரு ஐடியா இருக்கு,அந்த கடையில போய் வாழைப்பழம்  என்ன விலைனு  கேட்டுட்டு வந்திரு "
"எதுக்குடா?"
"சொன்னதை செய்,அப்புறம் சொல்றேன்"


கடையில்
"அண்ணா,பழம் எவ்வளவு?"
"4 ரூவா"
"வேண்டாம்."

"வினோத் கண்ணா,அந்த பழம் நாலு ரூபாய் யாம்டா,கொடுமை,நம்ப ஊர்ல இந்த விலைக்கு செவ்வாழை  பழமே வாங்கலாம்"
"மச்சான்,சக்சஸ் ,,,சக்சஸ் "
"என்னடா? அவன் பழம் நாலு ரூபாய் னு சொன்னதுக்கும்,சக்சஸ் க்கும் என்னடா சம்பந்தம்? "
"இருக்கு டா,இருக்கு..
மெட்ராஸ் ல  வாழபழம் விலை எப்படி தெரியுமா,, லுங்கி கட்டிக்கிட்டு போனா - 2.00, பேண்ட்டு போட்டுட்டு போனா - 2.50,
பேண்ட்டு போட்டுட்டு பைக்கில் போனா - 3.00 ,கார்ல போனா - 3.50,கம்பெனி ஐடி  கார்டு, வித்தியாசமான ஹேர் ஸ்டைல்,கிருதாவோட போனா 4.00..உனக்கு 4  தான சொன்னாங்க,அப்ப நீ முன்னேறிட்ட. "

"நெசமா வாடா?,அப்புறம்,இந்த மாதிரி முடி வெட்டிகிட்டா மட்டும் பொண்ணு பாக்குமா?,ஏன்?,எதுக்கு?"
"அது ஒன்னும் இல்ல, இந்த மாதிரி  முடி வெட்டிக்க காரணமே,என்கிட்ட பணம் இருக்குனு பந்தா காட்டத்தான்..பல பொண்ணுங்களுக்கு என்ன தேவை.?செலவு பண்ண ஏமாந்து போனா நம்மள மாதிரி நாலு ஜீவன்,அவ்வளவு தானே,அதுக்கான சிக்னல் தான்,இந்த கட்டிங்"
"ஒஹ்,,அப்படியா சேதி ..ஆமாண்டா ..நம்ம ஊர்ல,ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி இருந்துகிட்டு,இங்க அரை குறை டிரஸ் போட்டுக்கிட்டு திரியுது"

"சரி,முடி ஓக்கே,அடுத்து ஐகிளாஸ் தான் மாத்தனும்"

"ஐயயோ,கண்ணாடி கழட்டின்னா,எனக்கு கண்ணு தெரியாதே?"
"அப்போ, லென்ஸ் போட்டுக்கோ"
"போடா வெண்ணை,அந்த லென்சை  காலை,மாலை ரெண்டு நேரமும் கழுவனும்,அப்புறம் கண்ண தேய்க்க கூடாதாம்,கசக்க  கூடாதாம்,ஏகப்பட்ட கண்டிஷன் வேற,எனக்கு அந்த கிரகம் வேண்டாம்."
"சரி விடு,fast track கிளாஸ் போட்டுடலாம்"


"எவ்ளோ விலை வரும்"
"என்ன கொஞ்சம் லோ ரேட்னா 2000 வரும் "
ஸ்...ப்பா..இப்பவே கண்ணை கட்டுதே.








Thursday, August 19, 2010

சென்னையில் ஒரு வெண்ணை

நம்மள எப்படி கிராமத்தான் னு கண்டுபிடிக்கறாங்கனே தெரியல?.


அதனால ஒரு ஆராய்ச்சியில் இருக்கேன்.என்ன ஆராய்ச்சி தெரியுமா?.ஏன் என்கிட்ட மட்டும் எந்த பொண்ணும் பேச மாட்டேங்கிதுன்னு .
இல்ல இல்ல ,பாக்கவே மாட்டேன்னு போகுதுன்னு.
நான் ஒன்னும் பாக்க ரொம்ப கொடுமையானவனும் கிடையாது. அப்புறம் ஏன்?.
என்ன விட மகா மட்டமான மடையன்கள் கூட மன்மதனா சுத்துறாங்க,ஆனா நான்- ஹ்ம் வேண்டாம்.
ஒரு பையன் ,முக்கியமா ஒரு பொண்ணும் நம்மள மதிக்கறதே இல்ல.

உண்மை அறிய,இதில் பலவித வெற்றி கண்ட வினோத் கண்ணனை நாடினேன்.
அவன் சொன்ன வழிமுறைகள்  எனக்கு வலி முறைகள் ஆகவே தெரியுது.என்ன செய்ய?,..கொஞ்சம்  முயன்று தான் பார்ப்போமே.

மாற்றம் - 1 ,முதல் கோணல் முற்றிலும் கோணல்.

டேய் என்னடா ஹேர் ஸ்டைல்  இது? 80 ல ஹிந்தி ஹீரோ வச்ச மாதிரி..change டா என்றான்.
எங்க ஊர்ல இப்படி  தண்டா  வெட்டுவாங்க.நான் என்ன பண்ண?,அதுவும் தலைக்கு தேங்கா எண்ணெய் தேய்ச்சா நல்லதுன்னு பழகிட்டேன்டா.மாத்த முடியாதுடா.
போடா டுபுக்கு..மொதல்ல நான் சொல்ற மாதிரி செய்,அப்புறம் பாரு.

அவனே ஒரு கடைக்கு கூட்டிட்டு போனான்.கடை பேரு "கருப்பு-வெள்ளை".

கடைல ஒரு லிஸ்ட் படத்தை காட்டினாங்க,,உண்மைய சொல்லணும்னா ஒன்னு கூட நல்லாவே இல்ல.
எல்லாம் முடி வெட்டறப்ப பாதில ஓடி வந்தவனுங்க தலை மாதிரி இருந்துச்சு.

கடைசியா வேற வழியில்லாம "முள்ளம் பன்றி" யை செலக்ட் செஞ்சேன்.அது பேரு "spike". கொடும.
எங்க ஊரு ரவி பார்பர் இத பாத்தா,தொழிலையே விட்டுருவார்..அவ்வளவு மோசம்.


150 rs சார்,,ஐயோ,,நம்ம ஊருல ரெண்டு வருசத்துக்கே அவ்வளவு தானே..(10 *15 -150 ).ஆமா இப்படி குருவி கூடு மாதிரி நிக்குதே,எவ்வளவு நேரம் நிக்கும்,தலைக்கு குளிச்சா படுத்திறாது..
you should use hair gell da.

அப்ப தேங்கா எண்ணெய்?,ஊருல இருந்து ஆட்டி வந்தது இன்னும் அரை லிட்டர் இருக்கே?
அதை தூக்கி மொதல்ல வெளிய வீசு.
ஆமா,ஹேர் gell தெனமும் போடணுமா?
ஆமா ,daily two times .
அது எவ்ளோ விலை?.
என்ன,ஒரு fifty rs இருக்கும்.

ஐயோ,இப்ப புரிஞ்சு  போச்சு டா.
என்ன?
நம்ம சாப்ட்வேர் கம்பெனில எதுக்கு அதிகமா சம்பளம் தராங்கனு.
ஆமாடா,இதுக்கே தான்.

சரி,இன்னொரு சந்தேகம்,தலையில ஹெல்மெட் எப்படி போடுறது?
ஹெல்மெட் போட்டா hairstyle எப்படி தெரியும்.போடவே கூடாது.
இப்பவே தலை சுத்துதே.








தொடரும் ..


http://enathupayanangal.blogspot.com/2010/08/blog-post.html#comments


Saturday, July 31, 2010

இதயம் துடிக்க மறந்த நொடிகள்..இதோ..



பெண் தேடி போனேன்..
அவள் அழகானவளா என்பதற்கல்ல..
அவள் என்னவளா என்பதற்காக..
பேசிப்பார்த்துவிட்டு வந்தேன்..
அவள் குணம் அறிய அல்ல..
என்னை பிடித்திருக்குமா என அறிய..
இதழ் மலர்ந்து..
இமை அடைத்து..
இறுமாப்பு துறந்து..
இதயம் படபடக்க..
இன்சொல் கேட்டேன்..
இவனை "பிடுச்சிறுக்கு"….
இதயம் மொத்தமாய் துடிக்க மறந்தாலும்
இனி இவள் மடிதான்......
                             - குட்டி 

Friday, July 23, 2010

நடுநிசி நச்சுகள்-உறுத்தல்கள்- குட்டி

பொள்ளாச்சியின் ஒரு தனியார் மருத்துவமனை, அந்த நடுநிசி 2 மணியை லேசான சிறு துளிகள் நனைத்து ரம்யமாக வைத்திருந்தது. வராண்டாவை தவிர்த்து பெரும்பாலான அறைகளின் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தது.
நெங்சு வலி வந்த பெரியவருடன் உள்ளே நுழைந்த உறவினர்கள் அந்த மருத்துவமனையின் அமைதியை குழைத்து ரகளையில் இறங்கியிருந்து. "டேய் உடனே ரமேஷ் டாக்டர கூப்பிடுங்கடா, என் பேர சொல்லுங்கடா அவருக்கு தெரியும்"என யாரோ ஒருவர் பணி மருத்துவரிடம் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அப்போது வந்த ஈ.சி.ஜி ரிப்போர்ட் அது "ஹார்ட் அட்டாக்" என்பதை உறுதி செய்திருந்தது. கூடவே இருதய துடிப்பும் , இரத்த அழுத்தமும் மிக குறைவாய் இருப்பதை உணர்ந்த மருத்துவர் " சார் இவருக்கு இங்கு முதலுதவி மட்டுமே செய்ய முடியும். மேற்சிகிச்சைக்கு கோயம்புத்தூர் தான் செல்ல வேண்டும்" என கூற வந்தவர்கள் ரகளையை அதிகபடுத்தியிருந்தனர்.
நோயாளிக்கு இருதய வலிக்கான மாத்திரைகள் கொடுக்கப்பட்டு, வாந்திக்கான ஊசி போடப்பட்டு ஆம்புலன்சில் கோயம்புத்தூருக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர்கள் கோயம்புத்தூர் செல்லாமல் அருகிலிருந்த இன்னொரு மருத்துவமனையில் பிரச்சனையை புதிதாக ஆரம்பித்திருந்தனர். அடுத்த ஆஸ்பத்திரி போகும் வரை அமைதியாயிருந்த அந்த கும்பல் நோயாளியை இறக்கியவுடன் ஆம்புலன்சு டிரைவரிடம் "நோயாளி இறந்தா காலையில் உங்க ஆஸ்பத்திரி மேல கல் எறியறோம் பாருங்கடா" என சத்தம் போட, கடுப்பான டிரைவர் "வந்து எறிஞ்சு பாருங்கடா"என கூறிவிட்டு சவாரிக்கான வாடகை கூட வாங்காமல் கிளம்பினார்.
இந்த பிரச்சனையை பார்த்துக்கொண்டிருந்த இரண்டாவது மருத்துவமனை ஊழியர்கள் அந்நோயாளியை கோயம்புத்தூர் அனுப்ப தயாராகிக் கொண்டிருந்தனர்.
நிதர்சனங்கள்:-
1) அட எல்லா டாக்டரும் மனுசங்கதான்யா! அவங்க தூங்க வேண்டாமா?அவசரத்திற்கு வேற டாக்டர்கிட்ட வைத்தியம் பாக்க மாட்டங்களோ!! பார்த்த டாக்டரே அவ்ர் இருதயநோய் மருத்துவத்தில் தனியாக பயிற்சி பெற்றவர் என கூறியும் நம்பிக்கை இல்லை!
2) தண்ணி போட்டுட்டு வந்து அராஜகம் பண்ணினா, உடனே பயந்து நடுங்கி வைத்தியம் பாக்கணுமா?[ லொள்ளு பண்றவங்களுக்கு எந்த மருத்துவமனையும் வைத்தியம் பண்ண முன் வராது! நமக்கு எதுக்கு பிரச்சனைனு!]
3) இந்த நச்சுகளின் தொந்தரவை தவிர்க்கவே பெரும்பாலான மருத்துவமனைகள் இரவில் நோயாளிகளை உள்ளே கூட விடுவதில்லை.
4)மக்கள் படம் பார்த்து, பேப்பர் படிச்சு ரொம்பவே கெட்டு போய்ட்டாங்கப்பா! எல்லா மருத்துவமனைகளும் காசு புடுங்கறாங்கன்னு கெளப்பிவிட்டதால எவனுக்கும் எந்த டாக்டர் மேலயும் நம்பிக்கையில்லை!(நம்பாமல் போனா நஷ்டம் ஒண்ணும் டாக்டருக்கு இல்லயே!). இனிமே மக்கள் படத்தோட இயக்குனர்கிட்டயும் , நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டர்கிட்டயும் வைத்தியம் பாத்துக்கோங்கப்பா![அட பாவிகளா நாங்க தியேட்டர் போய் படம் பார்த்து பல நாட்கள் ஆச்சே!]

மொத்தத்தில் நடுநிசி நச்சு
* அது மருத்துவரை பொறுத்தவரை இது போன்ற நோயாளிகள்
* அது நோயாளியை பொறுத்தவரை மருத்துவர்கள். வெளங்கிடும் இந்த நாடு....

Friday, July 2, 2010

அம்"மனம்" - கவிதை - குட்டி

அரைகுறையென்பது ஆபத்தென்றறியாத
அரை வேக்காட்டு முட்டாளாய்!
ஆட்சியெனும் ஆர்வத்தில்
அலங்கோலமாய் படைக்கப்பட்டாய்!
அமைதியென்னும் அதிர்வை
அறியாத சினமாய்!
அன்பென்ற ஆத்திச்சுவடியை
அழித்துக்கொண்ட நெஞ்சமாய்!
அழகான மனமொன்றை
அழித்துவிட்ட மூர்க்கனாய்!
அனுபவங்கள் அலையாட
அந்தரங்கள் ஆசையாய்!
ஆர்ப்பரிக்கிறேன் ஆசையாய்
அமைதியான மனத்திற்காய்!
அன்பு, அழகு, அறிவு,அனுபவம்,அமைதி எனுமிந்த ஐந்து
ஆக்கங்களை அளிப்பாயா? இந்த அற்பனுக்கு ஆதரவாக!
- குட்டி

Wednesday, June 30, 2010

ஈழ தமிழ் மாணவர்கள் - கரூர் முகாம்

கரூர் ல்  உள்ள ஈழ தமிழ் மாணவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது.

உதவி செய்யவும்.


1 S.No Name Education Collage / School name Fathers name Fathers occupation Total fees Offer N.G.O Fees amount req Details Funders
2 1 L.Kavitha cruz Ist Year B.E(E.E.E) Kumaraswamy Engg collage - Karur j.Lawrence cruz Painter (Coolie) 72,500 9,500 42,500 -9790457621  
2 L.Dickson cruz 11th Std Bharani park metric school- Karur j.Lawrence cruz Painter (Coolie) 20,000 500 10,000 429 marks in 10th  
3 K.Ramesh kumar 3rd year (Catering) Valluvar collage - Karur Died N.A 60,000 6,000 30,000 9655642044  
4 K.Yoganeshwari Ist Year Fashion designing Valluvar collage - Karur Died N.A 20,000 6,000 7,500 9655642044  
5 S.Anusiya Ist year Bsc Micro bio Sharadha nikedhan Womens collage - Karur Palani Coolie 12,000 6,000 5,000    
6 Sangeetha 1st Year B.Sc (C.S) Valluvar collage - Karur Died N.A 9,000 6,000 3,000    
7 M.Janarthiga Ist year Bsc Micro bio Sharadha nikedhan Womens collage - Karur Mahendran Coolie 12,000 6,000 5,000    
8 Ushanth Rejinan 2nd Year B.Com Valluvar collage - Karur Manikka vasagam Coolie 14,000 4,000 6,000    
10  9 Sivadas 3rd Year Bsc (Chemistry) St.Joseph Collage - Trichy (Hostel) Devaraj Not working (Accident) 20,000 0 10,000    
11  10 R.Rajeshwari Ist Year Fashion designing Valluvar collage - Karur Rajalingam Coolie 20,000 6,000 7,500    
12  11 S.Gopinath Ist Year B.Com Kongu arts & science Collage - Karur Sunil Coolie 16,000 4,000 6,000    
13  12 R.Sasi Rubi 2nd Year B.Com Sharadha nikedhan Womens collage - Karur Rathnakumar Painter (Coolie) 8,000 4,000 4,000    
14  13 R.Rajkumar Ist Year D.E.E.E P.G.P Polytechnic - Namakkal Rathnakumar Painter (Coolie) 25,000 4,000 10,000 Attempt  
15  14 G.Kanaga Vaani Ist Year B.Com Sharadha nikedhan Womens collage - Karur S.Ganesalingam Not working (not well) 8,000 4,000 2,000    
16  15 S.Aravith 3rd Year B.Com Valluvar collage - Karur Suppaiya Tailor (Coolie) 14,000 4,000 6,000    
17  16 Revathi 2nd Year Kongu arts & science Collage - Karur Selvanayagam Coolie 15,000 4,000 5,000    
18  17 Sagaya Marry 3rd Year Bsc (C.S) P.G.P Arts & Science collage - Namakkal Kalimuthu Daily wage worker 16,000 6,000 6,000    
19  18 Yogalakshmi 2nd Year B.Com Kongu arts & science Collage - Karur   Tailor (Coolie) 14,000 4,000 5,000    
20  19 Gopi 11th Std Bharani park metric school- Karur Karnan Not living with family 20,000 500 7,500 451 marks in 10th  
21  20 P.Sangeeta 3rd Year B.A.Eng Sharadha nikedhan Womens collage - Karur Palani Coolie 10,000 4,000 5,000    


தொடர்புக்கு:

Prabu: +91 9902873799
Nattramilan: +91 9886002570

Friday, June 18, 2010

நினைவலைகள் - சிறுகதை - குட்டி

சென்னையில் நடந்த இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்குக்கு அப்பா பொன்னுசாமியுடன் வந்த முருகனுக்கு எல்லாமே அதிசயமாய் தெரிந்தது. பொன்னுசாமி அணிந்திருந்த ஒரு பழைய வெள்ளை சட்டையும், பழுப்பு வேஷ்டியும், காடு மேடுகளை சுற்றிப்பார்த்த பகுதி தேய்ந்த அந்த இரப்பர் செருப்பும் முருகனை வெட்கபட வைத்திருக்க வேண்டும். முருகன் அப்பாவிடமிருந்து விலகி நடந்தது மற்றும் அவன் நடந்து கொண்ட விதம் அதைக் காட்டிக்கொடுத்தது.
பொன்னுசாமி ஒரு விவசாய கூலி.அவருடைய அந்த வெள்ளைசட்டையையும், வேஷ்டியையும் முக்கிய விசேஷங்களுக்கு முட்டும் உடுத்தியிருப்பார், இப்போது மகனது கவுன்சிலிங்குக்காக.
கவுன்சிலிங் அறை முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்தது, அங்கே மேலும் சில வெள்ளை வேஷ்டிகள் ஆனால் அவை எல்லாமே விலையுயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். பெரும்பாலான மற்ற மாணவர்கள் புது பேண்ட், சர்ட் சகிதத்தில் நுனிநாக்கு ஆங்கிலம். ஆனால் முருகனோ அவனது காலின் கீழ்பகுதியை காட்டும் உயரம் பத்தாத பேண்ட், இரப்பர் செருப்பு மற்றும் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் தைக்கப்பட்ட வெளுத்துப்போன கலர் சட்டையுடன் மைக்கில் சொல்லும் ஆங்கிலத்தை அரைகுறையாய் புரிந்துகொண்டிருந்தான். முருகனின் அப்பா மற்ற மாணவர்களின் அப்பாக்களிடம் எந்த கல்லூரி நன்றாக இருக்கும் என தரவரிசை கேட்டுக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒரு தரவரிசை சொல்ல எந்த கல்லூரியில் மகனை சேர்ப்பது என்ற குழப்பத்தில் இருந்தார்.
வரிசையாய் கல்லூரிகள் நிரம்பிகொண்டிருக்க பொன்னுசாமி இடைவிடாது அருகிலிருப்பவர்களை விசாரித்து மீதமுள்ள கல்லூரிகளின் தரவரிசையை மனதில் பதியவைத்துக்கொண்டிருந்தார்.மற்ற அப்பாக்கள் இரண்டு மூன்று பேராவது இவரை மனதில் திட்டியிருக்க வேண்டும், இடைவிடாது அவர்களை நச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வயது முதிர்ந்த அந்த மருத்துவதுறைகளின் இயக்குனர் டை, கோட் சகிதமாக கடக்க அவரை அறிந்தவர்கள் எழுந்து மரியாதை செய்தனர். பொன்னுசாமியும் மற்றவர்கள் ஏன் எழுந்தார்கள் என்பதுகூட அறியாமல் மரியாதைக்கு எழுந்து வைத்தார்.
சிறிதுநேரத்தில் அவர்களும் உள்ளே சென்று கல்லூரியை தேர்வு செய்யவேண்டிய கட்டாயம்.பொன்னுசாமிக்கு தரவரிசை மறந்துபோகவில்லை, இன்னும் பத்து மாணவர்கள் அடுத்தது நாம் என சிந்தனையுடன் அமர்ந்திருந்தார். திடீரென பொன்னுசாமியையும், முருகனையும் உள்ளே அழைக்க இருவரும் யார் நம்மை அழைப்பது எனகுழம்பி போனார்கள்.
அந்த முதிர்ந்த மருத்துவ இயக்குனர் தான் இவர்களை அழைத்திருந்தார். முருகனது ரேங்கை கேட்டு மீதமுள்ள கல்லூரிகளை வரிசையாய் அவரே ஒரு சீட்டில் எழுதி பொன்னுசாமியிடம் கொடுத்தார்.மீதமுள்ள கல்லூரிகளை இந்த வரிசைபடி தேர்ந்தெடுங்கள் என்றார்.
பொன்னுசாமிக்கு மிகவும் சந்தோசம், "ஆஹா என்ன ஒரு நல்ல குணம், என் போல் படிக்காதவர்களுக்கு முன்வந்து உதவி செய்வது!!" என கூறிவிட்டு, தான் மனதில் பதித்த கல்லூரிகளின் வரிசைகளை நீக்கிவிட்டு இயக்குனர் எழுதிகொடுத்த வரிசையில் முதல் கல்லூரியையே தேர்ந்தெடுத்துவிட்டார்.முருகனுக்கு அந்த இயக்குனர் முகம் ஏனோ ஆழப்பதிந்து போனது.அவனது மனநிலையில் ஏதோ மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும், பஸ்ஸில் ஊருக்கு கிளம்பியபோது அப்பாவின் கையை பிடித்துக்கொண்டு மிக நெருக்கமாய் அமர்ந்திருந்தான்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் தன்னுடைய தந்தையுடன் கல்லூரியில் நேர்முக தேர்வுக்கு போனபோது நடந்தவைகளை நினைவலைகளாய் யோசித்துக் கொண்டிருந்தார் மருத்துவ இயக்குனர் அவரது குளிரூட்டப்பட்ட அறையில்.

Wednesday, June 9, 2010

நேர்மை என்னும் எதிரி - சிறுகதை - குட்டி

புதிதாக பதவியேற்று அரசுமருத்துவ அதிகாரியாக அந்த ஊருக்குள் நுழைந்த குமாருக்கு வயது 27. அவருக்கு அவரது நண்பன் கூரிய அறிவுரை " உனக்கு கீழ் வேலை பார்க்கும் யாரையும் கண்டிக்காதே, அவர்கள் எல்லோரும் அதே ஊரில் பல வருடங்கள் பணியில் இருப்பார்கள். நீ கண்டிப்புடன் இருந்தால் உன் மீது அரசாங்கத்திற்கு மொட்ட கடுதாசி போட்டு தொல்லை கொடுப்பார்கள்". அது அறிவுரை என்பதை விட, அது அவரது அனுபவம் என்பதே சரியான வார்த்தை. நேர்மையை அதிகம் நம்பி 27 வருடங்களை கடந்த குமாருக்கு நண்பனது அனுபவம் கவலை தரவில்லை.
இந்த மருத்துவமனையில் நிறைய மாற்றங்கள் தேவை என்பது முதல் மாதத்திலேயே தெரிந்தது. மாற்றத்தின் முதல்படி வருகைபதிவேட்டை சரியாக கையாள்வது. தினமும் எல்லா அறைகளையும் சுற்றி வந்த அந்த வருகை பதிவேடு மருத்துவரின் அறைக்குள் அடைக்கலம் புகுந்தது.அத்துடன் மருத்துவ சான்றிதல்களுக்கு வாங்கப்பட்டு வந்த பணம், பிரசவத்திற்க்கு வாங்கப்படும் பணம், ஊசி மற்றும் குளுக்கோசுக்கான பணம் என எல்லாம் நிறுத்தப்பட்டது. குசு குசு என மற்ற ஊழியர்கள் பேசி கொள்வதை குமாரல் உணர முடிந்தது. இரண்டாவதாக மருத்துவமனைக்கு தண்ணீர் விடுவதற்கு பணம் கேட்கும் அந்த பஞ்சாயத்து ஊழியரை ஊர் தலைவர்களிடம் சொல்லி கண்டிக்க, அதுவும் சரி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்கள் எல்லாம் சரியாக நடந்தது. மூன்றாவது வாரம் மேலதிகாரியின் திடீர் சுற்றுப்பார்வை அந்த மருத்துவமனையில். எல்லாம் சரியாக இயங்கியும் பல தவறுகளை சுட்டி காட்டிய மேலதிகாரி, குமாரை அடுத்த நாள் விளக்கமளிக்க வேண்டினார்.
மேலதிகாரியின் அலுவலகத்தில் குமாரின் நேர்மை விலைபேசப்பட்டது, குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் சுமூகமாக முடிந்தது. அடுத்த நாள் முதல் முன்னர் இலவசமாக வழங்கப்பட்டு வந்த மருத்துவச்சான்றிதல்களுக்கு நூறு ரூபாயாக விலை நிர்ணயக்கப்பட்டிருந்தது.

Wednesday, May 26, 2010

கருச்சிதைப்பு - குட்டி



சுகம் பெற்று
சுகம் கொடுத்த
ஆண், பெண் இருவருக்கும்
எங்கே போனது அறிவு?
தவறிழைத்த அவர்கள்
தலைநிமிர்ந்து, கண் திறந்து
உலகை நோக்க!
உலகமறியாத, கண்திறக்காத,
தலைநிமிராத என்னை ஏன்
கருவறையில் கறி கத்தரிக்காயாய் சிதைத்துவிட்டீர்!
காமம் என்ற கள்ளத்தனத்துக்காக!
ஆணுறையிட்டிருந்தால் என்
சாபம் உனக்கில்லையே!
அரசாங்கம் அறிவித்திருக்கிறதாம்
நீங்களும் சிதைபடுவீர்! சிறைக்குள்ளே!
அது மருத்துவனானாலும் மானுடனானாலும்
மன்னிப்பதற்கில்லையாம்!!
- குட்டி

Monday, May 10, 2010

பனிரெண்டாம் வகுப்பு

இன்னும் ஒரு மாதத்தில் 12 ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பம் .
12 ம் வகுப்பு - தமிழ் மீடியம்.இந்த இங்கிலீஷ் மீடியம் பையன்களுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு?,நாம தான் ஸ்கூல் first வரணும்.அவனுங்க முகத்திலே கரிய பூசனும்.

HSC public exams will start within one month.
12 ம் வகுப்பு - இங்கிலீஷ் மீடியம் .

இந்த தமிழ் மீடியம் பசங்களுக்கு ,எல்லாமே இவனுங்க தான் அப்படிங்கற ஒரு தெனாவெட்டு,நாம first rank வாங்கணும்.அவங்களுக்கு ஆப்பு வக்கணும்.


தமிழ் மண்ணில் (அதாங்க தமிழ் மீடியம்)
இங்கிலீஷ் மீடியம் பையனை நோக்கி ---

தமிழ் - டேய் வெள்ளையனே ,இங்க வாடா..
 English - என்னடா தெனாவெட்டா? யார்டா நீ?
தமிழ் - டேய்,தமிழ் எல்லைக்கே வந்துட்டு,என்னை யார்னு கேட்கிறயா? தமிழன்டா ..12 ம்  உ  வகுப்பு சிங்கம்டா..(12 E ).
English - உ ...உ ...


தொடரும் ரணகளம்....

Wednesday, April 28, 2010

தனுஸ்கோடியின் கடற்காற்று

தனுஸ்கோடியின் கடற்காற்று...


ஓங்கி அடித்தாலும் அந்த உப்பு காற்றுக்கு
ஒரு சுகமுண்டு அந்நாளிலே!
தென்றலாய் இருந்தும் அதில் வந்த வாடையில்
ஏனோ தமிழன் முகம் கோண!
வந்த வாடை என்ன கருவாட்டு வாடையா? அல்லவே!
அது சுகமான சுமையன்றோ!
எங்கள் ஊரில் நோய்பட்ட இலவொன்றும்
அண்மையில் இல்லையே!
காற்றின் திசையில் கடல் தாண்டி
தமிழன் கனவு தனி ஈழமோ! சிதைக்கப்பட்ட பிண ஈழமாய்!
சிதைக்கப்பட்டது தமிழன் என்னும் அப்பாவியின்
கனவு மட்டுமல்ல! பிணமும் தான்!
சிதைபட்ட பிணங்களுக்குள் தமிழன் அங்கே!
தன் இனத்தின் பிணவாடை கூட அறியாமலும்
சில தமிழர்கள் இங்கே!
-குட்டி

Friday, January 22, 2010

ஆசிரியர் - சிறுகதை

ஆசிரியர் - சிறுகதை – குட்டி


பல நாட்கள் கழித்து தான் படித்த கல்லூரியிலேயே புரபசர் பதவியில் கல்லூரிக்குள் நுழைந்த சந்தோசத்தில் கல்லூரியை அந்த மாலை நேரத்தில் சுற்றி பார்க்க கிளம்பினான் ராஜா.ஆனால் எதோ நெருடல் மனதில் இருந்து கொண்டே இருந்தது. மாணவனாய் இவனையும் இவனது நண்பர்கள் பற்றியும் மொத்த கல்லூரியும் அறிந்த விசயம், ஒரே வார்த்தையில் சொன்னால் முரடர்கள்.
அந்நாள் ஒரு மாலை தன்னுடய நண்பர்களுடன் கல்லூரி வளாகத்தில் நிற்கையில் அவ்வழியே சென்ற அவனது ஆசிரியர் அவர்களை பார்த்து பேசிய வார்த்தைகள் "இந்த கல்லூரிய சுத்துன கழுத எங்கயும் போகாதாம்- போய் பொழைக்கற வழிய பாருங்கடா".பேசிய வார்த்தைகள் பொறுக்காமல் அவரை பழி தீர்க்க அன்றிரவே அவரது விடுதி அறையில் தீ வைத்து விட்டு, அவரை அடுத்த நாள் அதே இடத்தில் கேலி செய்தது ஞாபகம் வந்தது. “மன்னிப்பு என்பதே கிடையாது வாத்தி” எனக்கூற அவரோ கூனி குறுகி போனார். சொல்ல முடியாத வேதனையில் அவர் தவித்ததை பார்த்து பார்த்து ரசித்தவர்கள் இவர்கள். ஆனால் இன்றோ அதே கல்லூரியின் புரபசராக புன்முறுவலோடு வாழ வேண்டிய கட்டாயத்தில் அந்த பழைய மாணவனும்.

சூரிய உதயத்தை பார்த்து பல வருடங்கள் கடந்திருந்தது. வாழ்க்கையின் கட்டாயம் செய்த கோலம், அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகளுக்கு இன்றே தயாராக வேண்டி இருந்தது அதிகாலையில். ஆசிரியர்களின் வகுப்புகளை புறகணிப்பதும், கிண்டல் செய்வதும், வகுப்புகளை பாதியில் நிறுத்துவதும் பொழுதுபோக்காய் இருந்த அவனுக்கு தற்போதய இடம், பொருள், ஏவல் எல்லாம் உறுத்தியது. எப்படி வாழ்ந்தவன் நான் இந்த கல்லூரியில் ராஜாவாய், மந்திரியாய், பெண்களின் கதாநாயகனாய். ஆனால் ஏதோ உறுத்தியது கண்டு பிடிக்க முயற்சித்தும் முடியாமல்.
அன்று அவன் நடத்த வேண்டிய பாடம் "வாழ்க்கையில் முன்னேற கடைபிடிக்க வேண்டிய விசயங்கள்"என்ற தலைப்பில். நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என துவங்கி பொரியவர்களை எந்த அளவு மாரியாதையுடன் நடத்த வெண்டும் என்பது வரை அரை மணி நேரம் பேச, வழக்கமான மாணவர்கள் வழக்கம் போல் பேசி கொண்டும், சிரித்து கொண்டும், ஆசிரியரை கிண்டல் செய்வதுமாய் இறுக்க. கோபம் கொப்பளிக்க, உதடுகள் முனக முயற்சிக்க கட்டுப்படுத்தியவனாய் தனது அழைப்பு துண்ட்டிக்கபட்ட செல்பேசியுடன் மன்னிப்பு கேட்டு வகுப்பின் வெளியே சென்றான். தனது உறுத்தலுக்கு பதில் கண்டவனாய் வகுப்பறைக்குள் ஒரு தெளிர்ச்சியுடன் நுழைந்தான். ஞான ஒளி பெற்றவனாய் அடுத்த ஐந்து நிமிடங்கள் பேசிய விசயம் " வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் நாளை வரும் பிரச்சனைகளை இன்றே அறிய வேண்டும்,அதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் பதில் கூறும் முன்னும் அவர்களுக்கு கட்டளைகள் இடும் முன்னும் அவர்களது ஸ்தானத்தில்(இடத்தில்) இருந்து யோசித்து செயல்பட வேண்டும்"என உணர்ந்தவனாய் பேசி வகுப்பை முடித்துக்கொண்டான்.
பலவருடங்கள் படித்த கல்லூரி பாடம் தராத அறிவை அவனுக்கு வழ்க்கை பாடம் தந்திருந்தது. வகுப்பு முடிந்து கிளம்பும்போது ஒரு சந்தோசம் வந்திருந்தது. நேரமே கல்லூரியில் இருந்து கிளம்பினான் அவனது ஆசிரியரை பார்த்து மன்னிப்பு கேட்பதற்காகவும், பல வருட மன உறுத்தலை மறப்பதற்காகவும்.

Sunday, January 3, 2010

மனிதநேயம்

மனிதநேயம் மரத்துப்போன மனிதமும்
மனித நேயம் மறந்து போன மனிதனும்
பொறாமை மிகுந்து போன கூட்டமும்
பொறுமை இழந்து போன தலைவனும்
எந்நாட்டின் சொத்தெனில் யாரிவர்கள்
மடமையை பறித்தெடுத்து காட்டுவர்?

சிறான் முதற் கிழாற் வரை
சுயநலமெனும் சூழ்ச்சியே மூச்சு எனில்
சிற்றெறும்பை காப்பாற்றும் சிறந்தானை
சல்லடையாய் சலித்தாலும் சந்தர்ப்ப
சூழ்நிழையால் சந்திப்பேனா? இது ஒரு சாபக்கேடா?

மடமை போற்றும் களைகளினுள்
மனிதமொன்று கண்டேன் குற்றுயிறும் குழையுயிறுமாய்
மண்ணைவிற்று பொன்னை விற்று என்
மனதின் மனிதநேயம் காப்பாற்றுவேன்!
அட நண்பரே! அது உன்னுள்ளும் அதே நிலையில்!
அடை காக்கும் கோழியாய் உயிரிட்டு காப்பாயா?
உன் சந்ததிக்கும் அதை காட்டிடுவோம்!
வரலாற்று சின்னமாய்!
- குட்டி

நெஞ்சம் பொறுக்கவில்லையே..சரணம் ஐய்யப்பா

மார்கழி மாதம்,சபரிமலை செல்லும் மாதம்.
நண்பர் ஒருவர் கேட்டார் ,மாலை போடுவீங்களா?நான் சொன்னேன்,இல்லை என்று.
ஏன் நம்பிக்கை இல்லையா என்றார் ? அதை முழுதாய் மதிப்பதால்,என்றேன்.
உண்மையும் அதுதான்.
மாலை போடாமல் ,அதை மதிக்கும் என்னை போன்ற அன்பு நண்பர்களே,நம்மையும் ஐயப்பன் காப்பார்.
பல நண்பர்கள் மாலை போட்டு,அதற்காக தம்மையே மாற்றி கொண்டதை கண்டு மகிழ்ந்து இருக்கிறேன்.

என் கோவம் எல்லாம், மாலை போட்டு ,அதை மிதிக்கும் சில அயோக்கிய சாமிகள்(ஆசாமிகள்) தான்.
மாலையுடன் தொடரும் அருவருக்க தக்க வார்த்தைகள்,,தொடரும் சிகரட்டுகள்,,தொடரும் தண்ணி..
கொடுமையின் உச்சகட்டம் ,,மாலையுடன் மெரினா பீச் ல் பீருடன் ஆட்டம் .
எதோ பிக்னிக் போற நினைப்பு ,இந்த தருதல பசங்களுக்கு,மாலை போட்டதுக்கு அடையாளமா நெத்தியில் பட்டை மட்டும் போட்டுகிட்டு ,அட சே ..

போன வருடம் நண்பர் ஒருவரை குறிப்பிட்டு ,,மாலை போடும் முன் பார்ட்டி,,மாலை கழட்டிய பின் பார்ட்டி ..என்ன இது என்று ?
அவரே தேவலை போல. மாலைக்கு உரிய மரியாதை தந்தார்.

உண்மை உங்களுக்கே தெரியும்.
ஐயப்பனே,, இதற்கும் ஒரு விடை சொல்லுங்களேன்..