Wednesday, April 28, 2010

தனுஸ்கோடியின் கடற்காற்று

தனுஸ்கோடியின் கடற்காற்று...


ஓங்கி அடித்தாலும் அந்த உப்பு காற்றுக்கு
ஒரு சுகமுண்டு அந்நாளிலே!
தென்றலாய் இருந்தும் அதில் வந்த வாடையில்
ஏனோ தமிழன் முகம் கோண!
வந்த வாடை என்ன கருவாட்டு வாடையா? அல்லவே!
அது சுகமான சுமையன்றோ!
எங்கள் ஊரில் நோய்பட்ட இலவொன்றும்
அண்மையில் இல்லையே!
காற்றின் திசையில் கடல் தாண்டி
தமிழன் கனவு தனி ஈழமோ! சிதைக்கப்பட்ட பிண ஈழமாய்!
சிதைக்கப்பட்டது தமிழன் என்னும் அப்பாவியின்
கனவு மட்டுமல்ல! பிணமும் தான்!
சிதைபட்ட பிணங்களுக்குள் தமிழன் அங்கே!
தன் இனத்தின் பிணவாடை கூட அறியாமலும்
சில தமிழர்கள் இங்கே!
-குட்டி