Sunday, January 3, 2010

நெஞ்சம் பொறுக்கவில்லையே..சரணம் ஐய்யப்பா

மார்கழி மாதம்,சபரிமலை செல்லும் மாதம்.
நண்பர் ஒருவர் கேட்டார் ,மாலை போடுவீங்களா?நான் சொன்னேன்,இல்லை என்று.
ஏன் நம்பிக்கை இல்லையா என்றார் ? அதை முழுதாய் மதிப்பதால்,என்றேன்.
உண்மையும் அதுதான்.
மாலை போடாமல் ,அதை மதிக்கும் என்னை போன்ற அன்பு நண்பர்களே,நம்மையும் ஐயப்பன் காப்பார்.
பல நண்பர்கள் மாலை போட்டு,அதற்காக தம்மையே மாற்றி கொண்டதை கண்டு மகிழ்ந்து இருக்கிறேன்.

என் கோவம் எல்லாம், மாலை போட்டு ,அதை மிதிக்கும் சில அயோக்கிய சாமிகள்(ஆசாமிகள்) தான்.
மாலையுடன் தொடரும் அருவருக்க தக்க வார்த்தைகள்,,தொடரும் சிகரட்டுகள்,,தொடரும் தண்ணி..
கொடுமையின் உச்சகட்டம் ,,மாலையுடன் மெரினா பீச் ல் பீருடன் ஆட்டம் .
எதோ பிக்னிக் போற நினைப்பு ,இந்த தருதல பசங்களுக்கு,மாலை போட்டதுக்கு அடையாளமா நெத்தியில் பட்டை மட்டும் போட்டுகிட்டு ,அட சே ..

போன வருடம் நண்பர் ஒருவரை குறிப்பிட்டு ,,மாலை போடும் முன் பார்ட்டி,,மாலை கழட்டிய பின் பார்ட்டி ..என்ன இது என்று ?
அவரே தேவலை போல. மாலைக்கு உரிய மரியாதை தந்தார்.

உண்மை உங்களுக்கே தெரியும்.
ஐயப்பனே,, இதற்கும் ஒரு விடை சொல்லுங்களேன்..

1 comment:

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.