Wednesday, May 30, 2012

கதம்பம் - ட்விட்டர் சண்டையும்,நானும்

பதிவுலகம் பற்றி:
2008ல்  இருந்து  பதிவுகளை  படித்து வருகிறேன்.2009 ல் இருந்து ஒரு 10 பதிவுகளை எழுதி இருப்பேன்.நிறைய பதிவுகளை எழுதவில்லையே,என் பதிவுகள் எல்லாம் புகழ் பெறவில்லையே என்றெல்லாம் எண்ணியது உண்டு.இப்போது நடக்கும் சண்டைகளை பார்க்கும் போது,கவலை எல்லாம் மறந்து மகிழ்ச்சி பொங்குகிறது.
எங்கே பிரபலம் என்றாலும்,பிரச்னையும் (பிற-சனியும்)  கூடவே வரும் போல . :)
பின் குறிப்பு - ரெண்டு பதிவர்களிடம் மட்டும் தொலைபேசியில் பேசி உள்ளேன்.இதுவரை எந்த பதிவுலக நிகழ்விலும் கலந்து கொண்டது கிடையாது.எந்த பதிவரையும் நேரில் சந்தித்தது கிடையாது.

திரைப்பட தாகம்:
நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து விட,திரைப்படமே கதி என்று நிலைமை ஆகி விட்டது.முன்பெல்லாம் மாதம் ஒரு படம் என்ற நிலைமை மாறி,வரம் ஒரு படம் என்றாகி விட்டது.
ராட்டினம் - வித்தியாசமான முடிவை தவிர வேற ஒண்ணும் கவரவில்லை.
கலகலப்பு-முதல் பாகம் பார்த்து விட்டு மூஞ்சியில ஈ ஆடலை,நல்லவேளை இரண்டாவது பாகம் காப்பாத்துச்சு.
வழக்கு எண் 18 /9 - ரொம்ப பிடிச்சிது,ரெண்டு முறை பார்த்தேன்.

சாகும் விவசாயம்:
நான் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவன்.எங்களது பாரம்பரிய தொழில் விவசாயம்.எனது தலைமுறையில் விவசாயம் செய்ய ஒருவரும் எனது சொந்தத்தில் இல்லை என்பதே உண்மை.இன்னும் இருபதே வருடங்களில் சோத்துக்கு சிங்கி அடிக்கும் நிலை வரலாம்.மேலும் இப்போது விவசாயம் செய்வோரையும் பாதிக்கும் ஒரு மகா மட்டமான  திட்டம் "மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்" .


 நான்கு முடிந்தது,ஐந்து ஆரம்பமானது.

குவாலியன்(Qualian )  நிறுவனத்தில் சேர்ந்து வெற்றிகரமாக நான்கு ஆண்டுகள் ஆகி விட்டது.ERP - Openbravo ERP ல் தான் ஐந்து வருட வேலையும்.இந்த உலகில் மிக குறைவான மக்கள் தான் தனக்கு பிடித்த வேலை செய்கின்றனர்.அதில் நானும் ஒருவன்.

1 comment:

  1. இந்த உலகில் மிக குறைவான மக்கள் தான் தனக்கு பிடித்த வேலை செய்கின்றனர்.அதில் நானும் ஒருவன். வாழ்த்துகள்..

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.