Tuesday, March 22, 2011

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 1.


நாமக்கல் மாவட்டம்,கரிச்சிபாளையத்தில பாண்டியன்னு சொன்னா ஒருத்தருக்கும் தெரியாது."பாலிடிக்ஸ் பாண்டியன்னு" சொன்னாதான் எல்லாருக்கும் தெரியும்.
அப்படி, இவர் என்ன அரசியலில் சாதிச்சிடாருன்னு கேட்கறவங்களுக்கு தான் இந்த "வரலாறு".

வாழ்க்கையில ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும்.அந்த மாதிரி, நம்ம அண்ணன் பாண்டியனுடைய கனவு, ஒரு தேர்தலில் வெற்றி பெறனும் அவ்வளவு தான்.அதுக்காக,இவரும்  நாலு முறை வார்டு மெம்பர்க்கு நின்னுருக்காரு.எல்லாம் தடவையும்,இவருக்கு கிடைச்ச வோட்டு என்னமோ ரெண்டு தான்.மொத முறை, இவரு  அம்மாவும் ,அப்புறம் மூணு முறை இவரு பொண்டாட்டி சின்னபிள்ளையும் போட்ட வோட்டு தான்,இந்த ரெண்டாவது வோட்டு.


அண்ணனின் அரசியல் வாழ்வின் ஆரம்பமே "பாட சாலை" தான்.
"எங்க பாண்டியனுக்கு வோட்டு போடறவங்க எல்லாம் கை தூக்குங்க" என்றார் டீச்சர்,,பச்,,
பத்தாம் வகுப்புல,லீடர் போஸ்டுக்கு நிக்க சொல்லி சண்முகதினால் தூண்டி விடப்பட்டு,முட்டை வோட்டுல அவமான பட்டு அரசியல் வாழ்வை துவக்கியவரு தான் அண்ணன்.

2001.

"இந்த தடவ நான் வார்டு மெம்பர்ல நிக்குல புள்ள" என்றான் பாண்டியன்.
"அப்பா,நல்ல குமாரசாமி, நான் உன்ன கும்புட்டது வீண் போகல சாமி,இந்த ஆளுக்கு இப்பவாச்சும் புத்தி வந்துச்சே" என்றாள் சின்னபிள்ளை.
"அது இல்ல புள்ள,இத்தன நாளா நானும் மெம்பர்ல நின்னுட்டேன்.அதான் ,இந்த தடவை பஞ்சாயத்து எலெக்ஷன்ல நிக்கலாம்னு இருக்கேன்  "
"அட பாவி மனுசா,இது வரைக்கும் உள்ளூர்ல நம்ப மானம் கப்பலேத்துனது பத்தாதுனு, அய்யா துரை  ,இப்ப கிராமம் முழுக்க மானம் கெட்டு நிக்க போறியா?,ஏன் இப்படி தல புழுப்புல ஆடுற?.ஐயோ இந்த கொடுமைய நான் எங்கன போய் சொல்லுவேன்.இதா,இங்க பாரு,இந்த முறை மட்டும் எலெக்ஷன்ல ரெண்டு வோட்டுக்கு மேல வாங்கு,நான் இனிமே வாய மூடிகிட்டு இருக்கேன்.இல்ல, இந்த பொழப்ப இதோட விட்டுரு,ஆமா சொல்லிபுட்டேன்." என்று புலம்பினாள் சின்னபிள்ளை.
அம்மா அழாதமா,அழாதமா என்று அவளின் ரெண்டு பெண் குழந்தைகளின் ஆறுதலையும் பொருட்படுத்தாது நம்ம அண்ணன் "கிராம தலைவர்" பதவிக்கு நின்னார்.



வழக்கம் போல,இவரும் யாரையும் வோட்டு போட கேட்க வில்லை .முதல் முறை வார்டு மெம்பராய்  நின்ன போது கேட்டது.அப்புறம்,வோட்டு எண்ணுனதும் ஊரே சிரிச்சுது.
அடுத்த முறை நின்னதும்,தொடந்து நின்னதும், யாரும் இப்ப எல்லாம் நம்ம அண்ணனை ஒரு பொருட்டாய் என்றதே இல்ல.

"என்ன புள்ள நம்ம சின்னம் என்னனு தெரியும் இல்ல,"வாளி",கடைசி சின்னம் ,கரெக்டா போட்டுரு என்ன?" என்று சின்னபிள்ளையிடம் சொன்னான் பாண்டியன் 
"போடுறேன்,போடுறேன்,ஆமா அப்புறம்  நீயும் அந்த மூணு வோட்டை மறந்துறாத.அதுக்கு அப்புறம் இருக்குது உனக்கு, வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறுன கதை "

என்ன தான் சண்டை போட்டாலும்,கட்டுன புருசனுக்கே வோட்டு போட்டாள் சின்னபிள்ளை.

வோட்டு எண்ணும் நாளும் வந்தது.
வழக்கமாய் நம்ம அண்ணன் வோட்டு எண்ணும் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டார்.ஆனா இந்த முறை தன்னோட பொண்டாட்டிகிட்ட போட்ட சண்டைக்காக வோட்டு எண்ணும் சாவடிக்கு போனார்.பின்ன?,இது அண்ணனின் 25 வருட அரசியல் வாழ்விற்கு விடப்பட்ட சவால்.

"யாருங்க நீங்க?,5000  வோட்டு 50,000  வோட்டு என்ற கட்சி ஏஜன்டே வல்ல,அதுக்குள்ள 7 மணிக்கே வந்துடிங்க?" என்றார் வாட்ச்மன்.
"நான்,கோலாரம் பஞ்சாயத்து எலெக்ஷன்ல நின்ருக்கேன். அதான் " என்றார் அண்ணன்.
"உங்க ஊருல,ரெண்டு  பொம்பளைங்க இடையே தான போட்டின்னு பேசிகிட்டாங்க" என்றார் வாட்ச்மன்.
"ஆமாமா ,இதுவும் ஒரு பொம்பளைக்கும் எனக்கும் இருக்குற போட்டி தான் " என்றார் அண்ணன்.

வழக்கமாய் இதை எதுவும்,கண்டுக்காத சின்னபிள்ளை,இந்த முறை வோட்டு எண்ணிக்கையை எதிர் பார்த்தாள்.இப்பவும்,இந்த ஆளு ரெண்டு வோட்டு தான் வாங்கும்,இனி எலெக்ஷன்ல நிக்காது என்று திடமாய் நம்பினாள்..அண்ணனே வந்து வோட்டு எண்ணிக்கையை சொன்னால் தான் உண்டு..

என்ன ஆச்சு அண்ணனின் அரசியல் வாழ்வு? 

ஒரு அரசியல்வாதி உருவான கதை - 2.

பெரியோர்களே,தாய்மார்களே பிடிச்சு இருந்தா எனக்காவது "இன்ட்லி" வோட்டு போடுங்க.

 

5 comments:

  1. மணமகள் தேவை உதவ முடியுமா..
    விவரம் அறிய கவிதை வீதி வாங்க...

    http://kavithaiveedhi.blogspot.com/2011/03/blog-post_22.html

    ReplyDelete
  2. அந்த photo கோலாரம் பஞ்சாயத்து எலெக்ஷன்ல எடுத்ததா?

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.