Wednesday, February 23, 2011

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,9 லட்சத்து 59 ஆயிரம் பேர் பற்றிய மனவருத்தமும்

கிராம நிர்வாக அதிகாரி தேர்வும்,மனவருத்தமும்.

தமிழக அரசின் வருவாய் துறையில் கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) பதவியில் 3,484 காலி இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடத்தப்படுகிறது. 10-ம் வகுப்பை அடிப்படை கல்வித்தகுதியாக கொண்டு நடைபெறும் இந்த தேர்வு எழுத கடும் போட்டி நிலவியது.  10 லட்சத்து 43 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தகுதியில்லாத 85 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.தமிழ்நாடு முழுவதும் 104 நகரங்களில் 3,465 மையங்களில் தேர்வு நடந்தது. 9 லட்சத்து 59 ஆயிரம் பேர் பிப்ரவரி -21 அன்று தேர்வு எழுதினார்கள். (நன்றி : மக்கள் முரசு ).

கிராம நிர்வாக அதிகாரிக்கான தகுதி ,வெறும் பத்தாம் வகுப்பு.ஆனால் இந்த தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் இளநிலை,முதுநிலை பட்டதாரிகள். எனக்கு தெரிந்த சில பொறியாளர்களும் இந்த தேர்வினை எழுதி உள்ளனர்.
ஏன் ?
1.வேலை இல்லாமை.
2.இருக்கும் வேலையில் நாட்டம்(விருப்பம்) இல்லாமை.
3.அரசு வேலை வேண்டும் - குறைவாய் வேலை செய்ய.
4.அரசு வேலை வேண்டும் - லஞ்சம் வாங்க.
5.மற்றவை.


இதில் எந்த தகுதியில் வந்தாலும்,இளைய தலைமுறையில் 9 லட்சம் பேர் வேலையில்லாதவர்கள் (அ) வேலையில் நிறைவு கொள்ளாதவர்கள் என்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விசயம்.இதை ஏன் யாரும் கவனிக்கவில்லை.?
அப்படியானால்,கிராம நிர்வாக அதிகாரி தேர்வு எழுதி வேலை கிடைக்காத 9 லட்சத்து 55 ஆயிரம் பேரின் நிலைமை.? இதற்கு அரசின் பதில் என்ன ..?



எதையும் அரசியலாக்கும்,வியாபாரமாக்கும் ஆட்கள் இந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்வினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர்.
காலி பணியிடங்கள்(இட,இன ஒதுக்கிடுகள் ) ,தகுதி,எதிர்கால முன்னேற்றம் இதை பற்றி எல்லாம் விளக்கி சொல்லாமல்,அனைவரையும் இந்த தேர்வு எழுத சொல்லி வீணாக்கியவர்கள்.
சில நாளிதழ்கள் இதற்கு என்று தனி பக்கம் ஒதுக்கி விளம்பரம் தேடி கொண்டன. பெரும்பாலான டுடோரியல் சென்டர்கள் VAO பயிற்சி முகாம் என்று மாணவர்க்கு 10 ,000 பணத்தை கரந்தன. இதற்கு  என்று சிறப்பு புத்தகங்கள் வெளியிட்டு காசு பார்த்தன.

தேர்வு எழுதும் முன், இதை எல்லாம் கவனித்தார்களா.?

அரசாங்க தேர்வு என்பது, சதி ,மத இட ஒதுக்கிடுகளை கொண்டது. பெரும்பான்மை சமூகமான BC (பொது) பிரிவுக்கான வெற்று இடம் - 254 மட்டுமே.மற்றவை கீழே.
இது தெரிந்து தான் 6 மாதம் இதற்காக ஒதுக்கி படித்து இருந்தார்களா?



http://www.tnpsc.gov.in/Notifications/dist_of_vacancies_vao2k10.pdf

நண்பர் கணேஷ் , பிரதமர்க்கு பாஸ்போர்ட் வழங்குவதை தீர்மானிக்கும் தகுதி உடைய பதவி, கிராம நிர்வாக அதிகாரி.மேலும் ,அனைத்தும் இளைஞர் கையில் .நல்லது செய்வார்கள் என்று நம்புவோம் என்றார்.

எனது வருத்தம் எல்லாம் பதவி பெற போகும் 3,484 பேர் பற்றியது அல்ல.மீதம் இருக்கும் 9 லட்சத்து 55 ஆயிரம் பேர் பற்றியது .
மேலும் இந்த அரசு தேர்வு ,நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.


காலம் பதில் சொல்லும்.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.