Friday, February 18, 2011

வருத்தபடா வாலிபர் சங்க முன்னாள் தலைவர் - அண்ணன் அசோக்குமார்


சிலருக்கு அழகு உண்டு ஆனால் அறிவு இல்லை ,
பலருக்கு அறிவு உண்டு  ஆனால் அழகு  இல்லை,
ஆனால் தலைவா,உனக்கு மட்டும் தானே,
இரண்டும் இல்லை.

எவர் எம்மை விட்டு சென்றாலும்,
எதற்கும் அஞ்சா சிங்கமாய்,
அவமானம் எல்லாம் சங்கத்தின் அடிமானம் என்று,
சங்கத்தை  காத்த எங்கள் தலைவனே.

நீ தான் சங்கத்தின் நிரந்தர தலைவன் என்று
நினைத்து இருந்த பொழுதில்,
நிர்மூலமாய் தவிக்க விட்டு
சங்கம் வேண்டாம் என்றும்
சம்சாரம் வேண்டும் என்று சென்ற எங்கள் சிங்கமே !!!.

நீ சங்கத்தை விட்டு சென்றாலும்,
நீ சேர்த்து வைத்த பெருமையையும்,கடனையும் 
இனி எக்காலமும் சங்கத்தால் அடைய முடியாது.

தலைவா,தன்னிகரற்ற எங்கள் தானை தலைவா,
தலைவியுடன் நீ பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துகிறோம்.

-வருத்தபடா வாலிபர் சங்கம் - பதிவு எண் - 29844111 / 1995

வருத்தபடா வாலிபர் சங்க  முன்னாள் தலைவர் - 
"ஆட்டையாம்பட்டியின் அரிஸ்டாட்டில்" அண்ணன் அசோக்குமார் - திருமண நாள் - 21st Feb 2011

சோலையப்ப கவுண்டர் திருமண மண்டபம்,ஆட்டையாம்பட்டி

அண்ணனின் திருமண விழாவிற்கு அனைவரும் வருக,நல்லாதரவு தருக.

சங்கத்தின் புது தலைவருக்கான தேர்தல் ஆலோசனை 22 மாலை 7 : 30   மணியளவில் தொடங்கும்.

தகுதிகள்:


1 .வயது 30 க்கும் மேல்.
(58 கும் கீழ்)
2 .அறிவும்,அழகும் இல்லாதிருப்பது.
3 .அடிவாங்க உடம்பில் தெம்பு.
4 .நெருக்கடி நேரங்களில்
உடனடியாய் சங்கத்தை கலைக்கும் திறன் 
5.தலை மறைவாக இருக்க வேண்டிய அளவிற்கு ஒரு வீடு.
(வீடு கட்டி அடிவாங்க) 

6 comments:

  1. மொத்ததில வடிவேலு மாதிரி??
    திருமண நல்வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Shobbbbbahhhh... ippoove kanna kattuthey

    ReplyDelete
  3. நல்ல ஆலோசனைகளுக்கு அணுகவும் - மசக்கவுண்டன், c/o டாக்டர் பி. கந்தசாமி, பி.எச்.டி.

    ReplyDelete

உங்களின் கருத்துக்கள் எங்களை சிரிக்க,சிந்திக்க,சிலாகிக்க வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
உண்மையை பகிரலாம்,விவாதிக்கலாம்.