Sunday, January 23, 2011

ஹிந்தி - அறிந்தும் அறியாமலும்.


வெளிநாட்டிலும் சரி, உள்நாட்டிலும் சரி(தமிழகம் தவிர),நாம் சந்திக்கும் ஒரு சங்கடம் - ஹிந்தி.
ஹிந்தி தெரியாமல் பல இடங்களில் சந்தி சிரித்து,ஹிந்தி படித்து கொண்டிருக்கிறேன்.



இந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தி தெரியாதா.? என்ற கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் தவிக்கும் ஒரு தமிழன்.முன்பெல்லாம் சில விளக்கங்கள் சொல்வேன்,இப்போதெல்லாம் விளக்கமே கிடையாது.சிரித்து கொண்டே சென்று விடுவேன்.
இந்த விளக்கங்களை கேட்ட பிறகு,அவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள்,கேட்கும் கேள்விகள் மகா எரிச்சல்.

1 . ஹிந்தி நம் தேசிய மொழி.அது தெரியாதுன்னு நீங்க சொல்றது ஆச்சிர்யமா இருக்கு.
2 . ஹிந்தி தெரியாமல் நீங்க இங்க வாழ முடியாது (அ) வாழ்றது கஷ்டம்.
3 . அப்போ உங்களுக்கு தமிழ் மட்டுமே  போதுமா?
4 . ஹிந்தி கற்று கொள்வது ஒரு இந்தியனின் கடமை.


நிகழ்வு - 1.(சவுதி அரேபியா)

நான் - ஐ வான்ட் டு கோ டு exit-6 ,
பாகிஸ்தானி - கியா? ஹிந்தி மாலும்?
நான் - ஹிந்தி மபி மாலும்.
பாகிஸ்தானி - அரபி.
நான் - மபி.
பாகிஸ்தானி - உருது.
நான் - மபி.
பாகிஸ்தானி - கியா..? !@$@##&* @### !@#$$$ !@##

அவர் கண்டிப்பாக என்னை திட்டி விட்டு சென்றிருக்க வேண்டும்.ஆனால் ஒரு சந்தோசம்.அவர் சொன்னது என்ன மொழி என்றே எனக்கு தெரியாது.
பிறகு தான் தெரிந்தது உருதும்,ஹிந்தியும் கொஞ்சம் சொந்தமாம்..ஹிந்தி தெரிந்தால் உருதுவை சமாளிக்கலாம் என்று ..

நிகழ்வு - 2.(துபாய்)

வழிப்போக்கன்1 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - எஸ்,
வழிப்போக்கன்1 - அச்சா,மே !@#$%  !@#$$ ^*())@!!
நான் - மே ஹிந்தி  நஹி மாலும்.
வழிப்போக்கன்1 - மதராசி ? !@#$%  !@#$$ ^*())@!!

நிகழ்வு - 3.(துபாய்)( ஒரு மணி நேரத்திற்கு பிறகு )

வழிப்போக்கன்2 - ஹாய்,ஆர் யு கமிங் ப்ரம் இந்தியா?
நான் - நோ, ஸ்ரீலங்கா - தமிழ் .
வழிப்போக்கன்2  -- ஒஹ் ,,,ஒகே..bye .

வெளி மாநிலங்களில்/நாடுகளில்  நம் ஆட்களின் புலம்பல் இது தான்.
ஹிந்தி தெரியாம நாம் கஷ்ட படுறோம் .தமிழ் நாட்டில் ஹிந்தி வேண்டும் .ஹிந்தி வேண்டும்.ஹிந்தி வேண்டும்

சரி,அப்படினா இதுக்கு ஒரே தீர்வு,,பள்ளி பாடத்தில் ஹிந்தி சேர்க்கப்பட வேண்டும் என்று நான் சொல்வேன் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு.






தமிழ்நாடு எங்கள் நாடு,எனக்கு வேண்டாம் ஹிந்தி.

ஏன்?

1 .குஜராத்தில்  மூன்று மாதமாய் இருக்கிறேன்,ஹிந்தி ஆதிக்கம் மிக மிக அதிகம்.சொந்த மொழியான குஜராத்தி வழக்கில் ரொம்ப குறைவு.
இதே நிலை தான் நம் தமிழுக்கும் ஏற்படும்.இந்த ஹிந்தி ஆட்கள்,ஆங்கிலம் தெரிந்தால் கூட,ஹிந்தி மட்டுமே பேசும் ஹிந்தி வெறி புடித்த ஆட்கள்.

2 . வேற்று மாநில மக்கள் எளிதாய் நம் மாநிலம் வந்து குடியேற ஒரு தடைக்கல்,நம்ம தமிழ்.தமிழுக்கு பயந்து இங்கு வராத ஆட்கள் மூலம் நமக்கு வேலை வாய்ப்பு அதிகமாகிறது.
மேலும், வரும் வெளி ஆட்களும் தமிழ் கற்று கொள்வதால் தமிழ் வளர்கிறது.

3 . அப்படியானால் வெளி மாநிலம் செல்லும் நம் ஆட்களின் நிலைமை?,உங்கள் சொந்த விசயமாய் நீங்கள் வெளி செல்வதால்,ஹிந்தி அறிந்து கொள்வது உங்கள் விருப்பம்/கடமை.
நீங்கள்/நான் வெளி மாநிலம் சென்று பிழைக்க ஒட்டு மொத்த தமிழ் நாட்டையும் ஹிந்தி கற்று கொள்ள சொல்ல வேண்டாமே.
உதாரணம் - என் நாமக்கல் மாவட்டம்,இங்கு முக்கியமான தொழில்,போர்வெல்(ஆழ்துளை கிணறு).இவர்களின் தொழில் இடமே வட மாநிலங்கள் தான்.
இவர்கள் அனைவரும் ஹிந்தி கற்று கொண்டு தான் சிறப்பாக  தொழில் செய்கின்றனர்.

4 . ஹிந்தி வழக்கில் வந்தால் தமிழ் புத்தகங்கள்,தமிழ் படங்கள் அனைத்தும் பாதிக்கப்படும்.


5. இரு மொழி கொள்கை(தமிழ்,ஆங்கிலம்),நமக்கு ஆங்கில புலமை வளர உதவுகிறது.
ஹிந்தி வந்தால்,அதன் தாக்கம் அதிகமாக அதிகமாக அது ஆங்கிலத்தை பாதிக்கும்(குறிப்பாக கிராமப்புறங்களில்).



எனவே தோரயமாக, ஒரு 7 லட்சம் தமிழ்நாட்டு மக்களின் தேவைக்கு ,ஏழு கோடி தமிழ் மக்களும் ஹிந்தி படிக்க தேவை இல்லை என்பது என் கருத்து.

இவை அனைத்தும் ,எனது பார்வையில் ஹிந்தி மொழி .உங்கள் கருத்துகளையும் பகிரலாம்.

--> ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க. 

Thursday, January 13, 2011

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான் - 1

பரோடாவில் ஒரு பட்டிகாட்டான்.

சென்னையில் ஒரு வெண்ணை பதிவிற்கு நீங்கள் கொடுத்த பேராதரவிற்கு நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று,படித்துவிட்டு இனி எழுதவே வேண்டாம் என்று சொன்ன அந்த நான்கு நண்பர்களுக்கும் நன்றி,நன்றி, நன்றி.
கொஞ்சம் மனதை திடப்படுத்தி கொள்ளவும்(கொல்லவும் அல்ல) .
இதோ வந்து விட்டது,மற்றுமொரு தொடர் பதிவு. பரோடாவில் ஒரு பட்டிகாட்டான். மேலும் ஒரு துயர செய்தி.சென்னை வந்தவுடன் "சென்னையில் ஒரு வெண்ணை" தொடரும்.
ஒரு ஆறுதல் செய்தி.வேலை முடிந்தால் தான் சென்னை.ஆனால் வேலை முடிய(?,! $) இன்னும் இரண்டு மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஆகலாம்.



பரோடா என்பது குஜராத்தில் ஒரு ஊர்.பரோட்டா என்று படித்தவர்கள் அனைவரும் இதை கண்டிப்பாக படிக்க வேண்டியவர்கள்.
அதை இப்போது வடோதரா என்று மாற்றி விட்டார்கள்.எதுக்கு தான் ஊர் பேரை மாத்துராங்கனே தெரியல.
இங்க எனக்கு என்ன வேலை?,,வழக்கம் போல போட்டி போடற வேலை தான்.




பரோடா,உங்களுக்கு நினைவில் கொண்டு வர உதவுவது "Bank of Baroda", அதை ஏன் இன்னும் "Bank of Vadodara" என்று மாத்தல?,அதை மோடி கிட்ட தான் கேக்கணும்.அது யாரு மோடி?,
குஜராத் முதல்வர்,மீடியா மன்னர்,நரேந்திர மோடி.




பரோடாவில் பிடித்தது,
1. அழகா,அம்சமா செக்க செவேல்னு சேட்டு பொண்ணுங்களோட குழந்தைங்க.
2. மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோக்கள்.அதுவும் டீஸல் இல்லாமல் CNG யில்.
3.மதுவிலக்கு மாநிலம்,, நோ டாஸ்மாக்,,நம்ப தமிழ்நாடு " மது-விளக்கு" மாநிலம்.உண்மையை சொல்லணும்னா சரக்கு கிடைக்கும்,ஆனா ரேட் ஜாஸ்தி.நல்ல விஷயம்.
4.புறா,ரோடு முழுக்க புறா,ஊர் முழுக்க புறா. புறா பிடிக்க இந்த ஊர்ல தடையாம்.அப்புறம்,80 % மக்கள் சைவம்.
5.24 மணி நேரம் மின்சாரம்.நோ பவர் கட்.

பிடிக்காதது,
1 .பேசுறது ஹிந்தியா இல்ல குஜராத்தியா? கொஞ்சம் சொல்லிட்டு பேசுங்க.
2.பாக்கு போடும் ஆட்கள்.

சில விளக்கங்கள்.
1.எல்லாரும் சொல்லற மாதிரி ,குஜராத் முன்னேறுதா?,
ஆமாம்,உண்மை தான்.இப்ப கூட vibrant குஜராத் னு ஒரு திட்டம்.$370 பில்லியன் முதலீடு.
http://www.vibrantgujarat.com/

2.அப்போ, ஏழைகளே இல்லையா?காரணம்.
இல்ல இருக்காங்க,ரோட்டு ஓரத்தில்,பிச்சைக்காரங்க - எல்லாரும்.
காரணம்,தெரிஞ்சா சொல்வேன்.

3 .ரோடு வசதி எப்படி?
சூப்பர்,எல்லாம் பெரிய பெரிய ரோடு .எல்லா சிக்னலும் - ரவுண்டானா.

எனக்கு தெரிஞ்ச ஹிந்தி வார்த்தை, "துமாரா நாம் கியா ஹேய்?",,இந்த பிட்டை,இங்க கொளுத்தி விட்டேன்.
ஆனா எனக்கே அது ரிவிட் அடிச்சிருச்சு.
"துமாரா நாம் கியா ஹேய்" னு கேட்பது மரியாதை குறைவாம்."உன் பேர் என்ன?" மாதிரியாம்.
"ஆப்கோ நாம் கியா ஹேய்"னு தான் சொல்லனுமாம்."உங்க பேர் என்ன?"

அட பாவிங்களா, ஐஞ்சாவது வரைக்கும் நான் ஹிந்தில கத்துக்கிட்ட ஒரே வாக்கியம் இது தான்.அதையும் தப்பாய் சொல்லி குடுத்த அந்த வாத்தியார் ,நல்லா இருக்கட்டும்,அவுங்க பையன் வளமாய் வாழட்டும்.
ஏன்னா? , எங்க அப்பா government school வாத்தியார்,ஹி ,ஹி,ஹி .

நாளை இங்க உத்தரயன் பண்டிகை .அதை கொண்டாட நாளை அஹ்மதாபாத் போறேன்.
வருவேன்,தொடர்வேன்..அங்க குண்டு வெடிக்காமல் இருந்தால்.

வளரும் எழுத்தாளானுக்கு  ஒரு உதவி. 

கீழ இருக்கிற இன்ட்லி like பட்டனை அழுத்தி vote போடுங்க சாமி.
10  vote வந்த தான் இன்ட்லி சைட்ல போடுவாங்க.

Thursday, December 9, 2010

எனது கவிதைகள்

கடந்த ஒரு வருடத்தில் நான் எழுதிய கவிதைகளின்(கவிஞர்கள் மன்னிக்க) தொகுப்பு.ஒரு பத்து கவிதைகளை மட்டும் காணவில்லை.

December – 03-2010

எனது நண்பன் ராஜேஷ் விமானத்தில் சென்றது பற்றி.

எருமை என்று அழைத்தவர் எல்லாம்
சிறுமை கொள்ள - எள்ளி நகைத்தவர் எல்லாம்
எண்ணி வியக்க,பெருமையாய் எங்கள் அண்ணன் 
விமானம் ஏறி - அவமானம் தவிர்த்து , தன்மானம் காத்தாரே.



November -20-2010 
 
 
சும்மா,, 
 
கவிதை வந்தால் தான் ,காதலும் வரும் என்கிறாய்.
நான் என்ன கண்ணதாசனா,கவிதையை கொட்ட.
கொடுமை,உன்னை புகழ வேண்டும்,அது தானே உன் எண்ணம்.
எழுதி தொலைக்கிறேன்...

 
நீ காண,ஒரு மணி நேரம் செலவு செய்து
நான் வைத்த spike யை,ஒரு நொடியில் கலைத்து விட்டேன்.

உனக்கு முன் உன் அம்மா பார்த்ததால்.

November -18-2010

வாழ்த்து மடல் - வருத்தபடா வாலிபர் சங்க புது தலைவர்- "டான்" ரவி.

சங்கத்தை காக்க வந்த எங்கள் சிங்கமே,சிறுத்தையே,
வானின்றி அமையாது உலகு-இனி
டான் இன்றி திறவாது சங்கத்தின் கதவு ,
மாரி வந்தாலும்,தலைவர் மாறி வந்தாலும்
வந்தோர்க்கெல்லாம் வாழ்வளிக்கும், எங்களின்
"
வருத்தபடா வாலிபர் சங்கமே"

November-3-2010

அண்ணன் அசோக்குமார்(ஆட்டையாம்பட்டி ) பற்றி

பொய் :

அறிவில் சிறந்தவனே,
அழகின் மன்மதனே,
அன்பின் அரசனே -அசோகனே,நீ இல்லையேல்
ஆதரவு அற்றோருக்கு ஆளில்லையே !!!
 
மெய்:

அறிவில் சிறுத்தவனே,
அழகின் மண்-மதனே,
பிணியின் பினக்கே - அசோகனே,நீ இல்லையேல்
வருத்தபடா வயோதிகர் சங்கத்திற்கு ஆளில்லையே !!!

November-3-2010
("டான்" ரவி)

ரவி எண்ணின் சூரியன் என்று பொருள்,
இவரோ - சூரிய உதயத்தை கண்ணால் காணாதவர்.

ஆறு மணி வந்தும் அண்ணன் அசரவில்லை.
ஏழு மணி ஆகியும் எழுந்திரிக்கவில்லை.

மணியோ பத்து-
எழுந்தார்,அறுசுவை உணவு உண்டார்.
எடுத்தார் பையை - ஒரு புறமாய் மாட்டிகொண்டு,
வங்கி அலுவலர் போலே - வீதியிலே வந்தார்.

தொடரும்...

November-2-2010
Written by me for my friend Pradeep(poongothai),


மேதையாக இருந்த என்னை
பேதையாய் ஆக்கியவளே
என்னவளே - என் கோதையே - பூங்கோதையே,
உன் பூவிழி பார்வையில்,
பூலோகம் மறந்தேனே.

பூ இருக்குமிடம் தான் தேனும் இருக்கும்,
அந்த தேனை தேடி தானே தேனீக்கள் திரியும் ,
பூவாக இருப்பது நீ - பூங்கோதை,
தேனியாக அலைகிறேன் நான்,
தேனாய் இருப்பது - நம் காதல்.

பிரியமுடன் பிரதீப்.


August-9-2010
(அண்ணன் ஜெயக்குமார் (எ) குட்டி )

தேடாத தெருவில்லை , கானாத கன்னி இல்லை,
ஒன்றும் ஓட்ட வில்லை, ஆயினும் நன்றே,
ஆடி வந்தது,அதிர்ஷ்டமும் வந்தது,
அண்ணி 
கிடைச்சிட்டாங்க -
அண்ணனை ஆட்டி படைக்க.

மூன்று உண்மையும் கேட்ட பின்னரும்,சொன்னாங்களாம் -
அவரை ஆக்குவேன் நன்று என்று .



June-10-2010
(About chakkaravarthy -- எல்லாம் பொய்..company farewell காக சும்மா )

இவர் பெயர் மட்டும் இனிக்கா
செயலும் இனிக்கும் - சர்க்கரை

கொண்ட நட்பிற்காக
தன் உயிரையும் தருவர் - வர்த்தி ,மெழுகுவர்த்தி

செயல் என்று வந்தால்
புயல் போல் சுழல்வார் - சக்கரம்

வரம் வேண்டுமா என்றால்
வேண்டாமே என்று சிரம் அசைப்பார் ,
ஏன் என்றால் ?
இரு கரம் அல்ல -எனக்கு முக்கரம் உண்டு என்பார்,
எப்படி என்றேன்?
இப்படி என்றார் ,
சக்-கர-வர்த்தி என்றார்.


மொத்தத்தில்,
அல்லல் படும் அடியவர்க்கு அள்ளி தரும்
அரசர் இவர் - சக்கரவர்த்தி 

 
June-04-2010
(about Tharik)

தாரிக்கை நோக்கி...

பால் குடிக்கும் பாலகனா நீ?
இல்லை,கள் குடிக்கும் கள்ளன் நீ.

உண்மை பேசும் உத்தமனா நீ?
உண்மையையே பேசாத ஊர்சுற்றி நீ.

உலகம் அறியா அப்பாவியா நீ?
இல்லை,பல ....


June-04-2010
(About Chakkaravarthy,எல்லாம் பொய்..company farewell காக சும்மா )

மலர்களில் சிறந்ததாம் மல்லிகை,
குல தொழிலோ மளிகை ,
மனமோ வசந்த மாளிகை.

முல்லைக்கு தேர் தந்த பாரி,
உன்னாலே,வானம் பொழியுது மும்மாரி.



June-1-2010 (about me)

Openbravo என்ற ஒரு சொல்லை வைத்து,
பிழைப்பை ஓட்டுபவனே..

ஒன்றும் அறியாமல் இருந்தும்,ஊரை ஏமாற்றும்
ஒப்புக்கு சப்பாணியே !! !

ஈராண்டுகள் ஆன பின்னும்,ERP அறியாமல்
இளித்து கொண்டிருக்கும் இளிச்சவாயனே !!!

இனியாவது விளையாட்டை விட்டு வேலையை பார்,

இனியும் இளித்து கொண்டிருந்தால் , ஈராண்டுகள் அல்ல,
ஈரேழு ஆண்டுகள் ஆனாலும் உனக்கு ERP விளங்காது.

இப்படிக்கு உன் மனசாட்சி.


June-01-2010
(love)

உன் ரத்த நிற இதழ் தனில் - என் இதயம் இழந்தேன்,
உன் பசுமை நிற தலை தனில் - என் பசியை மறந்தேன்,
உன் உடலமைவு தனில் - ஒரு புது உலகம் கண்டேன்,
ஆனால்,
உன் கூர் முள் குத்தியதில்,என் பொறுமையை இழந்தேன்- ரோஜா செடியே




வாழ்க்கை வாழ,

சிரித்து விடு அல்லது சிந்தித்து விடு,
பேசி விடு அல்லது பேச விடு,
போராடி விடு அல்லது ஓடி விடு,
சுருக்கமாய் சொல்கிறேன் -
வாள் பிடி அல்லது வாலை பிடி.

May-28-2010

உன்னை காணவே காலை வந்தேன்,ஆனால் நீ வரவில்லை.
மாலை வரை காத்து கிடக்கிறேன் , ம் , நீ வரவில்லை.
தேடினேன்,மாற்றினேன்,மன்றாடினேன் ,நீ மட்டும் வரவேயில்லை,
நீ வராதது குறித்து வருந்தவில்லை,ஆனால் அவன் பார்த்தவுடன் வந்துவிட்டாயே,
ஏன் ,
என் மேல் குற்றமோ? அல்லது நான் கொண்ட code ன் குற்றமோ?
என் அன்பு output யே ..

May-13-2010
About Manavalan

மண்ணை ஆழ பிறந்த மன்னனே,
மாதர் தம் மனதை கொள்ளை கொண்ட மன்மதனே ,
மனை ஆழ போகும் எங்கள் மண்ணின் மைந்தனே,
மணவாள மாமுனியே ! உன் மனை வாழிய ,வாழியவே !

About Manu marriage
மாந்தர் வந்தனர், 
மகளிர் வந்தனர், 
மணமாலை வந்தது, 
கூடவே மழையும் வந்தது. 

காலை போனது மாலை வந்தது, 
மழை விட்ட பாடில்லை. 

மழை சொன்னது,மணாளனை வாழ்த்த வந்தேன் என்று, 
(திரு) மலை சொல்கிறேன்,இன்று முதல் இவர் வாழ்வில் புயல் வீசும் என்று.

About Eswar-by lover Marakatham
என்னை கொள்ளை கொண்டதே,
என்னவரின் சிரத்தின் ஒளிவட்டம்.
ஈஸ்வரனை நாடியே - ஈசனை வேண்டினேன்,
மரகதகல் வேண்டாமே ,என் நாதனின் மாங்கல்யம் போதுமே.

About my lover:

உன் கொலுசு ஓசை கேட்க கோடி காதுகள் வேண்டுமடி,
உன் வளையல் ஓசை கேட்டுகொண்டிருக்க வயது நூறு வேண்டுமடி,
ஆனால் காதல் கடிதம் தந்தவனுக்கு கன்னத்தில் ஒன்று தந்தாயே -அதில் இருந்து,
எவ் ஓசையும் கேட்கவில்லையம்மா ,உன் செருப்போசை தவிர்த்து...

love failure;

வாழ்வே மாயம் என்ற வகையில்,
சாவே மேல் என்ற நிலையில்,
துன்பமும் ,துயரமுமாய் துவண்டு விட்ட வேலையில்,
உன்னை சந்தித்தேன்.
உன்னை அனைத்ததினால்,இவை அனைத்தையும் மறந்து விட்டேன்,
என் அன்பு மதுவே.


May-12,,
Love

கவிதை எழுத சொன்னாய்,கவிதைகளோடு வந்தேன்.
கடிதம் எழுத சொன்னாய்,கடிதங்களோடு வந்தேன்.
கரம் பிடிப்போமா என்றாய்,இரு கரம் பிடிப்போம் என்றேன்.
மறந்து விடு என்றாய்,மருந்து விட்டேன்-உலகை மறந்து விட்டேன்.
நன்றி - டாஸ்மாக் .


Sincere love:


நானும் காதலித்தேன்,
பூச்செடியையும் ,
பூனையையும் ,
புறாவையும்,
இந்த மூன்றை வளர்க்கும் பூங்கொடியையும் அவள் தங்கச்சியையும்.

My lover::

அவள் கண் இமைகள் இன்று கார்மேகமாய் தெரிகின்றன,
அவள் கன்னங்கள் இன்று கனியாக தெரிகின்றன,
அவள் அழகில்லை ,,ஆனால் அழகாய் தெரிகிறாள்,
எப்படி?
அவளை அழகாக்கினேன், போட்டோஷாப்(Photoshop CS5) ன் உதவியுடன்.


Jan-2
(குடிமகன்)

தண்ணி இல்லாமல் தண்ணி அடிப்பவனே,
full
யை full யாக அடிப்பவனே,
மூன்று வேளையிலும் முதன் வேலையாய் சரக்கை போடுபவனே,
தங்கத்தை(GOLDEN GRAPE) அங்கமாய் கொண்டவனே,
பகலில் உன் முன் monitor ,
இரவிலோ உன்னுள் monitor .